Difference between revisions of "பூக்கள் பூக்கும் தருணம்"

From HORTS 1993
Jump to navigation Jump to search
All>Anandabhay
All>Anandabhay
Line 1: Line 1:
[[பூக்கள் பூக்கும் தருணம்]][[Category:Vengadesh]] [[Category:Experiences]]
[[பூக்கள் பூக்கும் தருணம்]][[Category:Vengadesh]] [[Category:Experiences]]
==Episode 1 ==
[[File:tnau123.png|400px|right]]
அவை கோவை வருடங்கள். 89-லிருந்து 93-வரை. கோவை வேளாண் பல்கலையில் இளங்கலை தோட்டக்கலை படித்துக்கொண்டிருந்தேன். என் வகுப்பில் நானும், உடன் பயின்ற மதுரை புதூர் சிவகாமியும், அதே வருடம் வேளாண் பொறியியல் படித்துக்கொண்டிருந்த மாணவர்களில் ஐந்து பேரும், மாணவிகளில் நான்கு பேருமாக நாங்கள் பதினோரு பேரும் ஒரு செட்டாகத்தான் சுற்றித் திரிவோம். சினிமாவிற்குப் போவதென்றாலும், வகுப்பு முடித்து மாலை கோவிலுக்குப் போவதென்றாலும், விடுமுறை நாட்களில் தாவரவியல் பூங்காவில் பேசிக் கொண்டிருப்பதேன்றாலும் அனைவரும் பெரும்பாலும் சேர்ந்துதான் செல்வது. அந்த நாட்களின் மருதமலை கோவிலும், வடவள்ளி செல்லும் வழியிலிருந்த பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவிலும், வேளாண் பல்கலையின் இரண்டாம் பஸ் நிறுத்தத்திலிருந்த பூங்காவும், கேஜி-யின் சினிமா தியேட்டர்களும்...மறக்கமுடியாதவை. எங்களின் பதினோரு சைக்கிள்களுமே பத்தாயிரம் கதைகள் சொல்லும்.
எங்கள் குரூப்பில் இருந்த வேளாண் பொறியியல் சாந்திக்கு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் ஆனது. இரண்டு வீட்டாராலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். கணவர் கண்ணன் பல்கலையின் பக்கத்திலிருந்த பி.என்.புதூரில் ஜவுளிக்கடை ஒன்று வைத்திருந்தார். கண்ணனும், சாந்தியும் பி.என். புதூரில் வீடு வாடகைக்கு எடுத்திருந்தனர். இருவரும் மிகப் பொருத்தமான, அட்டகாசமான ஜோடி. அடுத்த ஒரு வருடமும் சாந்தி புதூரிலிருந்துதான் கல்லூரிக்கு வந்துசென்றார். அதன்பின், கண்ணனும் எங்கள் செட்டில் இணைந்து கொண்டார். நாங்கள் வழக்கமாக ஜமா போடுமிடங்களில், கண்ணனின் ஜவுளிக் கடையும், பி.என்.புதூரில் கண்ணன் சாந்தி அவர்களின் வீடும் சேர்ந்துகொண்டது. சாந்தியின் வீட்டில் சனி இரவுகளில், நள்ளிரவு வரை கூட பேச்சுக் கச்சேரி நடக்கும். சிரிப்பும், மகிழ்ச்சியுமாய்...பசுமையாய் இன்றும் நினைவிலிருக்கும் நாட்கள்.
குரூப்பில் சரஸ்வதி நன்றாக பரதம் ஆடக் கூடியவர். மேட்டூரைச் சேர்ந்த குருவிற்கு, சாந்தியின் மேல், திருமணத்திற்கு முன்பு மெல்லிய இன்ஃபேச்சுவேசன் இருந்தது. அது சாந்தியின் திருமணத்திற்குப் பின்பு, சாந்தியின் மேல் மிகப் பெரும் மரியாதையாகவும், பெரும் அன்பாகவும் பரிமாணம் கொண்டது. குரு ஓர் ப்ரமாதமான ஓவியன். எங்களின் எல்லாப் பிரச்சனைகளையும் நாங்கள் முதலில் பகிர்ந்துகொள்வது கண்ணனிடமும், சாந்தியிடமும்தான். திருமணத்திற்குப் பிறகு சாந்தி மிகவும் மெச்சூர்டாக மாறிப் போனார். குரு கொஞ்சம் எமோஷனல் டைப். ஒவ்வொரு முறையும் ஏதேனும் விஷயங்களில் குரு எமோஷனல் ஆகும்போதெல்லாம், அறிவுரை சொல்லி அமர்த்துவது சாந்திதான்.
ஒருநாள் வெள்ளி நள்ளிரவு தாண்டிய பின்னிரவு. நானும் குருவும், நாங்கள் தங்கியிருந்த கல்லூரியின் தமிழகம் விடுதியின் மொட்டை மாடியில் இருட்டில் உட்கார்ந்திருந்தோம். விடுதி முழுதும் உறக்கத்திலிருந்தது. தூரத்தில் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிலும் சோடியம் வேப்பர்களின் மஞ்சள் வெளிச்சம். பேச்சின் கனத்தில் குரு உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவன் குரல் தழுதழுத்திருந்தது. நான் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து “சரி, போய்ப் படுப்போம். நாளைக்கு காலையில ஏழு மணிக்கு ப்ராக்டிகல் க்ளாஸ் போகணுமில்லையா?” என்றேன். கீழே குரு அறைக்கு வந்ததும், டேபிளின் மேலிருந்த செய்தித்தாள் அட்டை போட்ட ஒரு புத்தகத்தை என்னிடம் தந்தான். “இதப்படி” என்றான். ”சரி” என்று சொல்லிவிட்டு அவனைத் துங்கச் சொல்லிவிட்டு என் அறைக்கு வந்தேன். எனக்கு இன்றைக்கு தூக்கம் வராது என்று நினைத்தேன். விளக்கைப் போட்டு, புத்தகத்தை பிரித்தேன்.
அப்போதெல்லாம் எங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. புதிதாகப் பத்தகம் வாங்கினால், அதை எங்கு, எப்போது வாங்கினோம் என்று புத்தகத்திலேயே எழுதிவைப்போம். எழுத்தாளர்கள் டெடிகேட் செய்வதுபோல், நாங்களும் யார் நினைவாக புத்தகம் வாங்கினோம் என்று முதல் பக்கத்தில் எழுதுவோம். குரு அப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதியிருந்தான் “என் அம்மாவைப் போன்ற...என்னை எப்போதும் ஆற்றுப்படுத்தும்...சாந்திக்கு...”
அப்புத்தகம்...பிகேபி-யின் ”தொட்டால் தொடரும்”...
மழை பெய்யும் காடு...என் கல்லூரி வாழ்க்கையில் மறக்கமுடியாத இரு பயணங்கள்/இரு வகுப்புகள் குறிஞ்சியில் நான் கழித்த நாட்கள். ஒன்று வால்பாறையில் நாங்கள் பங்குகொண்ட தேயிலை தொடர்பான பயிற்சி வகுப்புகள். மற்றொன்று ஏற்காட்டில் - காபி பயிர் தொடர்பாக. பயிற்சிக் காலங்களில் தோட்டக்கலை ஆராய்ச்சிப் பண்ணைகளில் அங்கேயே தங்கியிருப்போம். அந்த நாட்களில் நான் அடைந்த பரவசங்களை, இனிய நினைவுகளை எல்லாம் ஒவ்வொரு முறை மலைப் பயணமும் மேல் கொண்டு வரும். தடியன் குடிசை, பேச்சிப் பாறை, கல்லார் மற்றும் பர்லியார், குன்னூர்...வகுப்புகளுக்காகப் பயணித்த எல்லா இடங்களும் அந்த அடர் வனத்தின், குளிரின் மணத்தோடு உள்ளெழுகின்றன.
==Episode 2 ==
[[File:Teaestate.png|400px|right]]
தேயிலை பயிர் பயிற்சிக்காக வால்பாறையில் தங்கியிருந்தபோது, ஒருநாள், பக்கத்திலிருக்கும் தனியார் பண்ணையைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டோம். கல்லூரிப் பேருந்தில் சென்று இறங்கியதும், பண்ணையின் மேலாளர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பண்ணை இயங்கும் முறைகள் பற்றி சிறு அறிமுகம் தந்துவிட்டு, பண்ணையை சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றார். நானும் கொஞ்சதூரம் சென்றுவிட்டு, சரிவுகளில் ஏறி இறங்க முடியாமல், திரும்பி வந்து பேருந்து அருகில் நின்றுகொண்டேன். மழை வரும்போலிருந்தது. மேகங்கள் அடர்த்தியாய் மூடியிருந்தன. ஸ்வெட்டரை மீறியும் குளிர் இருந்தது. பேருந்து ஒரு மரத்தினடியில் நிறுத்தப்பட்டிருந்தது. அருகில் ஓடு வேய்ந்த ஒரு சிறிய கட்டிடம். அலுவலகமாகவோ ஸ்டோராகவோ இருக்கவேண்டும். பக்கத்தில் சிமெண்ட் தளம் போட்ட நீண்ட அகலமான களம்.
மழை மெலிதாய் தூற ஆரம்பித்தது. பேருந்தினுள் ஏறி உட்கார்ந்துகொண்டேன். தூரத்தில் சரிவில் வரிசை வீடுகள் தெரிந்தன. மலைப்பிரதேசங்களில் பயணிக்கும்போதெல்லாம் ஏன் மனம் சட்டென்று அமைதியாகி விடுகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு நிதானம் புகுந்துவிடுகிறது. குன்னூர், ஊட்டி பயணிக்கும் ஒவ்வொரு முறையும் இந்த வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறேன். மேட்டுப்பாளையம் வரை இருக்கும் மனது வேறு. மேலே ஏற ஆரம்பித்ததும் மனம் வேறு தளத்திற்கு நகர்ந்துவிடும்.
பேருந்தை நோக்கி ஒரு குட்டிப்பெண் ஒரு ப்ளாஸ்டிக் கூடையைத் தூக்கிக்கொண்டு வருவது தெரிந்தது. நான் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தேன். பேருந்து அருகில் வந்து “மாமா...” என்றது. நான் கீழிறங்கி “என்ன பாப்பா...” என்றேன். முகத்தில் தூய்மையும், விகசிப்பும். கூடையை என்னிடம் கொடுத்து “அம்மா எல்லாருக்கும் கொடுக்கச் சொன்னாங்க...” என்றது. கூடை நிறைய பழங்கள்; ஆரஞ்சுகளும், ஆப்பிள்களும். நான் வாங்கிக்கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் குட்டி...மழை தூறுதே... அப்பறமா வந்துருக்கலாமே...” என்று சொல்லிவிட்டு “பாப்பா பேரென்ன...வீடு எங்கயிருக்கு?” என்றேன். “கயல்” என்று சொல்லிவிட்டு தூரத்து வரிசை வீடுகளை சுட்டிக்காட்டியது. நண்பர்களும், மேலாளரும் மழையினால் சீக்கிரமே திரும்பினர். “இவங்க கயல்...நமக்கு ஃப்ரூட்ஸ் கொண்டு வந்துருக்காங்க...” என்று நண்பர்களிடம் சொன்னேன். நண்பிகள் கயலின் கன்னம் நிமிண்டினார்கள். கயல் சிரித்துக்கொண்டும், நெளிந்துகொண்டும் எங்கள் மத்தியில் குட்டி தேவதை போல் உரையாடியது. காலி கூடையை திரும்ப வாங்கிக்கொண்டு குடுகுடுவென்று ஓடியது. எனக்கு மாமாவின் குட்டிப் பெண்கள் நினைவுக்கு வந்தார்கள். கூடவே அம்மாவின் ஞாபகமும், வகுப்புத் தோழி மேனகாவின் முகமும். மேனகா என்ன செய்கிறார் என்று கண்கள் துழாவியது. மேனகா கலாவிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். சிரிக்கும் மேனகாவின் சித்திரம் உள்ளுக்குள் பதிந்துபோனது அன்றுதான். மேனகாவின் முகத்தில்தான் எத்தனை தூய்மை?
ஏற்கனவே மலையின், மழையின் நெகிழ்விலிருந்தேன். இன்னும் கொஞ்சம் வெளிச்சம் குறைந்து தூறல் அதிகமாகியது. தூரத்தில் கயல் விரைவது தெரிந்தது. பேருந்தினுள், பையில் ஸ்நாக்ஸ்கள் இருந்தன. கயலுக்கு கொடுத்திருக்கலாம். மறந்துவிட்டது. அந்த நாளின், அந்த நேரத்தின், மனதில் வெண்மையும் நெகிழ்வும் தாய்மையும் ஏறிய அந்தக் கணம்...
காடு கடவுள்தான் இல்லையா?...
==Episode 3 | நத்தை கூடுகள் ==
"இப்ப என்னதான் பிரச்னை உனக்கு?” விஸ்வா கேட்டான். நானும் விஸ்வாவும் யுனிவர்சிடி கேண்டீனின் வலதுபக்க படிகளில் உட்கார்ந்திருந்தோம். மணி இரவு பதினொன்றிருக்கலாம். விஸ்வா மேல் படியிலும், நான் அடுத்த கீழ் படியிலும் உட்கார்ந்திருந்தோம். கேண்டீன் முன்னால் ஆர்ச்சேர்டு போகும் வழியிலிருந்த சோடியம் விளக்கிலிருந்து வெளிச்சம், மரத்தின் இலைகளினூடே புகுந்து எங்கள்மேல் தெளித்திருந்தது. நான் தலை குனிந்து உட்கார்ந்திருந்தேன். பக்கத்தில் ஆசிரியர் விடுதி இருளிலிருந்தது.
[[File:snail.png|400px|right]]
“நீ மேனகாவ லவ் பண்றியா?”. இல்லை என்பதாய் தலையசைத்தேன். “அப்புறம், இது வெறும் இன்ஃபேச்சுவேவேஷன்தான்-னு நினைக்கிறேன். ஏன் இதுக்கு போயி இவ்வளவு அலட்டிக்கிற?” விஸ்வாவின் குரலில் மெல்லிய கோபமிருந்தது. அவன் கோபப்படுவதிலும் நியாயமிருக்கிறது. தினமும் முன்னிரவு வேளையில், அவனைப் பிடித்து, இம்மாதிரி அரையிருளில் உட்கார வைத்துக் கொண்டு, அன்றைய நாள் முழுக்க மேனகா எப்படி வகுப்புக்கு வந்தார், என்ன ட்ரெஸ் போட்டிருந்தார், வகுப்பில் என்னென்ன மாதிரி முகபாவங்கள் காட்டினார்...மேனகாவின் உதடுகள் பிரியாமல் சிரிக்கும் அந்தப் புன்னகை எப்படி இருந்தது...நண்பர்களிடம் மெலிதாய்ப் பேசும்போது அவர் முகம் எப்பக்கம் சாய்ந்தது...என்று ஒன்று விடாமல் விவரித்தால்...பாவம் அவனும்தான் என்ன செய்வான்?.
“டேய்...அழறியா?” விஸ்வா கேட்டான். நான் தலைநிமிர்ந்து பெருமூச்சு விட்டு சன்னமாய் கரகரத்து இல்லையென்றேன். கண்களில் நீர் கோர்த்திருப்பதை இருளில் அவன் பார்த்திருக்க முடியாது. கூடைப்பந்து மைதானம், மஞ்சள் வெளிச்சத்தில் நனைந்திருந்தது. தூரத்தில் தமிழகம் விடுதியில் இன்னும் பல அறைகளில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. தாமு அறையில் வெளிச்சமில்லை. ”மேனகா கல்யாணமே பண்ணிக்கக்கூடாது-னு தோணறது விஸ்வா” என்றேன். ”அடப்பாவி, நீ நார்மலாதான் இருக்கியா?” என்று கேட்டுவிட்டு “இதுக்குதான் அதிகமா புக் படிக்கக்கூடாதுங்கறது. இப்ப பாரு. எதையுமே ப்ராக்டிகலா யோசிக்க மாட்டியா நீ?. எப்பப் பாரு எதையாவது படிச்சிட்டு கனவுலயே மிதந்துட்டிருக்கிறது” அவன் குரலின் எள்ளல் என்னைத் தொடவேயில்லை.
“மேனகா மாதிரி...அந்த முகம்...அந்த தெய்வீகம்...கல்யாணமாகி ஒரு ஆணோட, ஒரு சராசரி லௌகீக வாழ்க்கையில என்னால நினைச்சிக்கூட பார்க்கமுடியலடா...கல்யாணமும் காமமும்தான் எத்தனை மலிவான விஷயம்...அந்த அழகு போயும் போயும் இதுக்குத்தானா படைக்கப்பட்டிருக்கும்?”
“அது சரி. முதல்ல இந்த பாலகுமாரனையும், தி.ஜா-வையும் படிக்கிறத நிறுத்து. ரொம்ப ஓவரா போற நீ. மேனகா கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டிகளோட சந்தோஷமா இருந்தா பத்தாதா? என்ன உளர்ற நீ?”
“ஆமா, அந்த தூய்மையான முகத்துல கவலையின் ஒரு ரேகை வர்றதையும் என்னால தாங்கமுடியுமானு தெரியல. மேனகாவுக்கு கல்யாணம் ஆச்சின்னா...” நான் மறுபடி தலைகுனிந்து கொண்டேன்.
“ஸ்ஸ்ஸ்ப்பா...தாங்க முடியல. எந்திரி நீ முதல்ல...இப்படியே விட்டா, ராத்திரி முழுசும் புலம்பிட்டே இருப்ப...” எழுந்து கைபிடித்து தூக்கிவிட்டான். இருவரும் சைக்கிளில் லாலி ரோடு கிளம்பினோம். கெமிஸ்ட்ரி லேப் தாண்டி, இடதுபுறம் திரும்பி, எங்கள் ஃபேகல்டியை கடந்தோம். பகலில், வகுப்பு இடைவேளையில், ஃபேகல்டிக்குப் பக்கத்திலிருக்கும் மரத்தடியில்தான் டீ குடிப்பது. அண்ணா ஆடிட்டோரியம், முகப்பில் விளக்கு வெளிச்சத்தோடு அமைதியில் இருந்தது. ஆடிட்டோரியத்தின் கீழ்த்தளத்தில் தான் நூலகம் இருந்தது. ஒருமுறை, அசோகமித்திரனின் “18-ஆவது அட்சக்கோடு” புத்தக வரிசைகளில் தேடிக் கொண்டிருந்தபோது, யதேச்சையாய் மேனகாவை ஒரு புத்தக வரிசையில் பார்த்து, மனம் படபடத்தது ஞாபகம் வந்தது. ஆர்.ஐ கட்டிடத்தைத் தாண்டி, கேட்டில் வெளியே வந்து, மெயின் ரோட்டில் ஏறினோம். விஸ்வா பேசிக்கொண்டே வந்தான். “நீயெல்லாம் புக் படிக்கிறதே வேஸ்ட். பாலகுமாரன், வாசகர்களிடம் இதத்தான் எதிர்பார்ப்பாரா?. ப்ராக்டிகலா, தரையில நிக்க வேண்டாமா?” என்றான். எனக்கு அவன் பேசியது எதுவும் காதில் நுழையவில்லை.
அர்ச்சனா பேக்கரி திறந்திருந்தது. டீ சொல்லிவிட்டு, வெளியிலேயே படியில் உட்கார்ந்து கொண்டோம்.
“இன்னிக்கு காலைல பத்தரைக்கு, மேனகாவோட, செகண்ட் கேட்லருந்து ஆர்ச்சேர்டு வரைக்கும் நடந்து வந்தேன். கூட வளர்மதியும் இருந்தாங்க” என்றேன். “அப்படியே பறந்துருப்பியே...” விஸ்வா சிரித்துக்கொண்டே சொன்னான். ஆம், அந்த சமயம் கொஞ்சமாய்தான் சுயநினைவு இருந்தது. சைக்கிளை உருட்டிக்கொண்டே நடந்து வந்தோம். நான் பெரும்பாலும் மௌனமாய்தான் நடந்தேன். மேனகாதான் அம்மாவைப் பற்றியும், தம்பிகளைப் பற்றியும் கேட்டுக்கொண்டு வந்தது. உறவினர் ஒருவர், குப்புசாமி ஹாஸ்பிடலில், ஒரு மைனர் சர்ஜரிக்காக அட்மிட் ஆகியிருப்பதாகவும், மறுநாள் மாலை அங்கு தான் போகவேண்டும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
“நாளைக்கு சாயந்திரம் குப்புசாமி ஹாஸ்பிடல் போலாமா?” என்றேன் விஸ்வாவிடம். “போலாம்...போலாம்...இன்னைக்கு நைட் தூங்குவியா?...” என்றான். டீ குடித்துவிட்டு, மறுபடி விடுதி திரும்பி அறைக்கு வந்து படுக்கும்போது மணி இரண்டு.
மறுநாள் வகுப்புகள் முடித்து, மாலை கிளம்பி, சைக்கிளை செகண்ட் கேட்டில் விட்டுவிட்டு, காந்திபுரம் பஸ் ஏறி, குப்புசாமி ஹாஸ்பிடல் ஸ்டாப்பில் இறங்கும்போது மணி ஆறாகியிருந்தது. தெரு விளக்குகள் போடப்பட்டிருந்தன. இரண்டு தெரு தள்ளிதான் ஹாஸ்பிடல் இருந்தது. உள்ளே நுழைந்து, ரிஷப்ஷனில் ரூம் நம்பர் சொல்லி (மேனகா சொல்லிய ரூம் நம்பர் அதுதானா என்று சந்தேகம் வந்தது) எப்படி போகணும் என்று கேட்டபோது, செகண்ட் ஃப்ளோர் போய் வலதுபக்கம் திரும்பச் சொல்லியது ரிஷப்ஷன் பெண். லிஃப்டில் ஏறி இரண்டாம் மாடிக்குச் சென்று, கதவு திறந்து வெளியில் வந்து வலது புறம் திரும்பியதும், மேனகா வராந்தாவிலேயே கண்ணில் பட்டது. நீல நிற உடையில் தேவதை மாதிரி...தேவதையின் குறுஞ்சிரிப்போடு...
விஸ்வா “நீ ஸ்டெடியா இருக்கியா?” என்று காதில் கேட்டான். அறைக்குள் கூட்டிச் சென்று எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியது. பதினைந்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். விஸ்வா சர்ஜரி பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். சின்ன சர்ஜரிதான் என்றும் இரண்டு/மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம் என்றும் உறவினர் சொன்னார். நான் இயல்பாயில்லாமல் ஒரு தவிப்போடுதானிருந்தேன். மனது முழுதும் நீலம் நிறைந்திருந்தது. டீ வந்தது. குடித்தோம். “நாங்க கிளம்பறோம் மேனகா” விஸ்வா எழுந்தான். மேனகா ரிஷப்ஷன் வரை கீழே வந்து, தான் அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் வருவதாக சொல்லி வழியனுப்பியது.
பஸ் ஸ்டாண்ட் வந்து வடவள்ளி பஸ் ஏறி உட்கார்ந்ததும், கனமாய் மழை துவங்கியது. சடசடவென்று அடித்துப் பெய்தது. பஸ்ஸின் முன்னால் வைப்பர்கள் மிக வேகமாய் அசைந்தன. கண்ணாடி ஜன்னல் வெளியே ரோட்டோர வரிசைக் கடைகளின் விளக்கு வெளிச்சங்கள் மழையில் கரைந்திருந்தன. நல்லவேளை, கார்டன் ஸ்டாப்பில் இறங்கும்போது, மழை குறைந்து நிதானித்து தூறிக்கொண்டிருந்தது. கேட்டில் நுழைந்து, பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் வரிசையில் சைக்கிளை எடுக்கும்போது கீழே பார்த்தேன். நத்தை ஒன்று கூடுதூக்கி ஊர்ந்துகொண்டிருந்தது.
==Episode 4 | மரமல்லி ==
”வீட்லருந்தே தண்ணி, பாட்டில்ல கொண்டு வந்துருக்கலாம். உனக்கு எதுதான் ஞாபகமிருக்கு? நீதான் அசமஞ்சமாச்சே...இரு வர்றேன்” சிவகாமி பஸ்ஸிலிருந்து இறங்கி, ரோடு தாண்டி எதிர் வரிசை கடைக்குச் சென்றார்.
மேலூர் பேருந்து நிலையம் இரவுக்குள் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. சோடியம் வேப்பர்களும், மெர்க்குரிகளும் ஒளிரத் தொடங்கியிருந்தன. பரோட்டா கடைகள் சுறுசுறுப்பாகியிருந்தன. மணி ஆறரை ஆகியிருந்தது. சிவகாமி தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு வந்தார்.
[[File:maramalli.png|400px|right]]
நாங்கள், மதுரை பெரியார் நிலையம் போகும் பேருந்தில் பின் படிக்கட்டுகளின் எதிரில் ஒரு இரட்டை சீட்டில் உட்கார்ந்திருந்தோம். மதுரை பேருந்துகள் எல்லாம், பேருந்து நிலையத்திற்கு வெளியில்தான் வரிசை கட்டி நின்றிருந்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த பேருந்துக்கு முன்னால், இரண்டு மதுரை பேருந்துகள் நின்றிருந்தன. பஸ்ஸில் விளக்கு போட ஏறிய கண்டக்டர், “முன்னால நிக்கிற வண்டிதான் முதல்ல எடுப்பாங்க, அதுல ஏறிக்குங்க’ என்றார். பேசிக் கொண்டிருக்கலாம் என்று வேண்டுமென்றேதான் மூன்றாவது பேருந்தில் ஏறியிருந்தோம். சிவகாமி “பரவால்லைங்க” என்றார். கண்டக்டர் விளக்கு போட்டுவிட்டு கீழிறங்கிப் போனார். “அவரு நம்மளப் பத்தி ஏதாவது தப்பா நினைச்சிருப்பாரோ?” என்றேன். சிவு சிரித்துவிட்டு “நினைச்சா நினைச்சிக்கட்டும்” என்றார்.
சிவு வீட்டிற்கு இன்று காலையில் 10 மணிக்கு வந்தது; இப்போதுதான் கிளம்புகிறேன். விளையாட்டுக்களும், உணவும், சந்தோஷமுமாய்...நேரம் எப்படி பறந்ததென்றே தெரியவில்லை. சிவு என்னுடன் கோவை வேளாண் பல்கலையில் தோட்டக்கலை படிக்கிறார். சிவுவின் அப்பா, மின்சார வாரியத்தில் வேலை செய்கிறார். சிவு-விற்கு இரண்டு தங்கைகள். மேலூரிலேயே பள்ளியில் படிக்கிறார்கள். சிவு-வின் அம்மா, வேண்டாமென்று சொல்லியும், முறுக்கும் சிப்ஸூம் கவரில் போட்டு “போகும்போது சாப்பிடு, வீட்டுக்குப் போறதுக்கு ஒன்பது மணி ஆயிடுமே” என்று பையில் வைத்தார்கள். என் வீடு திருமங்கலத்திலிருந்தது. சிவு-வும் ஒருமுறை திருமங்கலம் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
”இருட்டிடுச்சே, நீ கிளம்பி வீட்டுக்குப் போ சிவு. அம்மா வெய்ட் பன்ணிட்டிருப்பாங்க. நான் போய்க்கிறேன்” என்றேன். “பரவால்ல இங்கதான வீடு அஞ்சு நிமிஷத்துல போயிடுவேன். உனக்கென்ன இப்ப...நான் உட்கார்ந்திருக்கேன்; காலேஜிலதான் உம்மணாம்மூஞ்சியாட்டம் பேசவே மாட்ட; இப்பயாவது பேசு, நான் கேட்கிறேன்; பாலாவோட என்ன புக் படிச்சிட்டிருக்க?” என்று கேட்டார். சிவு-வின் வீடு, பஸ் ஸ்டாண்டிலிருந்து ஐந்து நிமிட நடையில், கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல் பக்கத்திலிருந்தது. நான் “திருப்பூந்துருத்தி” என்றேன். ”நல்லாருக்கா, என்ன கதை?” “எனக்கு புக் படிக்கத்தான் தெரியும், சரியா சொல்லவராது. நல்லாருக்கு. முடிச்சதும், தர்றேன்” என்றேன்.
பேச்சு, சுற்றிச் சுற்றி, கல்லூரி, நண்பர்கள் மத்தியிலேயே சுழன்றது. கல்லூரி வாழ்க்கையில், சிவு மாதிரி, ஒரு நெருக்கமான, வெளிப்படையான, எதுவென்றாலும் தயங்காமல் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு பெண் நட்பு கிடைத்தது கடவுள் தந்த வரம். சமயங்களில் ப்ராக்டிகல் ரிகார்டு பண்ணித் தரச் சொல்லியிருக்கிறேன். “அன்னன்னிக்கு நடத்துறத அன்னன்னைக்கு கொஞ்சமாவது ரூம்ல திருப்பிப்பாரு. ட்ரைமெஸ்டர் எக்ஸாம் ஆரம்பிக்குற வரைக்கும் தூங்காத...” என்று கடிந்துகொண்டிருக்கிறார். “எனக்கென்னவோ, நீ மேனகாவப் பாத்து ஜொள்ளு விடறமாதிரி இருக்கு...” என்றார் ஒரு நாள்.
சிவு, வேளாண் பொறியியல் படிக்கும் ஒரு நண்பர் குழுவுடன் மிகவும் நெருக்கம். அக்குழுவில் குரு, சாந்தி, பழனி, சரஸ்வதி, ஹேமா, குமார் இன்னும் சிலருண்டு. சிவு நட்பாய் எல்லோருக்கும் நெருக்கம் என்றாலும், குமாரின் மேல் நட்பு தாண்டிய ஒரு ப்ரியம் உண்டு. குமார் குடும்பத்தில், குமார்தான் முதன்முதலில் தலையெடுத்து, கல்லூரி வரை வந்திருப்பவன்; ஏழைக் குடும்பம். குடும்பப் பொறுப்புகள் அதிகம். ஒருமுறை சிவு, வகுப்பு இடைவேளையில், செமினார் ஹாலுக்கு வெளியே சைக்கிள் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது “நான் குமார்கிட்ட லவ்வ சொல்லிட்டேண்டா” என்றார். நான் புன்னகைத்து “என்ன சொன்னான்?” என்றேன். “நான் யோசிச்சி சொல்றேன்”னான். எனக்கு பொறுப்புகள் ஜாஸ்தி. என்னோட குடும்ப சூழ்நிலை தெரியும்தான? இது சரிவருமான்னு தெரியல”-ன்னான். ”எனக்கு இன்னும் அவன்மேல இருக்குற மதிப்பு ஜாஸ்தியாயிடுச்சு” என்றார். ”உனக்கு என்ன தோணுது? நான் ஏதும் அவசரப்பட்டு அவனை தொந்தரவு பண்ணிட்டேனோ...” என்று கேட்டார். “எனக்குத் தெரியல சிவு. நீயா சொல்லிட்டது நல்லதுதான்னு படறது. எனக்கு இந்த வயசுல காதலப் பத்தி தெளிவா ஒரு முடிவுக்கு வரமுடியல. நான் கனவுலயே இருக்கேன்னு விஸ்வா சொல்றான். எந்த நேரமும் கலைஞ்சி கீழ இறங்கிடுவே, கவனமாயிரு”-ன்னு பதட்டப்பட வைக்கிறான். குமார்கிட்ட சொல்லிட்டதான, பார்ப்போம். எல்லாம் சரியா வரும்னுதான் எனக்கு தோணறது” என்றேன். “உனக்கு லவ்வெல்லாம் வரலையா?” சிரித்துக்கொண்டே சிவு கேட்டார்.
“உன்ன மாதிரி நெருக்கமா நட்பிருக்கும்போது லவ்வுக்கு என்ன அவசரம்?” என்றேன். ”ஃபிஸிகல் காண்டாக்ட், அது சார்ந்த முயற்சிகள் எல்லாம் வேடிக்கையாத்தான் தோணுது சிவு. இப்போதைக்கு எனக்கு தூரமாத்தான் இருக்கு. நான் சோகமா இருக்கும்போது “ஏண்டா, ஏதாவது ப்ரச்னையான்னு” கேட்டு நீ கைபிடிச்சுக்குவயே...அன்பு பூசின அந்த மாதிரி தொடல்களே எனக்குப் போதும்” என்றேன். “சரி...சரி...உன் தத்துவங்களை ஆரம்பிச்சிராத...” என்று நிறுத்தினார்.
பஸ்ஸில் இருக்கைகள் நிரம்பியிருந்தது. கண்டக்டர் ஏறி டிக்கெட் போட ஆரம்பித்தார். நான் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிவுவின் வலதுகை விரல்களைப் பிடித்துக்கொண்டு “அப்பாகிட்ட சொல்லிட்டியா சிவு, குமாரப் பத்தி?” என்று கேட்டேன். “சொல்லிட்டேன். ரெண்டு மூணு மாசமாகும் பதில் சொல்ல. ப்ராக்டிகலா யோசிக்கணும். அதுவரைக்கும் அமைதியா இருக்கச் சொல்லியிருக்கிறார்” என்றார். நான் மனதுக்குள் சிவு-வின் அப்பாவை வணங்கிக்கொண்டேன்.
பஸ்ஸினுள் ட்ரைவர் ஏறினார். ‘சரி, நான் கிளம்பறேன். வீட்ல அம்மா, பாட்டி, தம்பிங்க எல்லோரையும் விசாரிச்சதா சொல்லு” கைபிடித்து அழுத்திவிட்டு, பஸ்ஸிலிருந்து சிவு இறங்கிக்கொண்டார். பஸ் கிளம்பி மெதுவாய் நகர்ந்தது. சிவு ரோடு தாண்டி மறுபுறம் போய் கடைவீதி தெருவில் நுழைந்து திரும்பி நின்று கையசைத்தார். நானும் பஸ்ஸினுள்ளிருந்து கையசைத்தேன். சிவு-வின் வெள்ளை சுடிதாரும், வானவில் கலர் துப்பட்டாவும் கடைகளின் விளக்கு வெளிச்சத்தில் பளபளப்பு ஏறித் தெரிந்தது. எனக்கு அலங்காநல்லூரில் டாக்டர் அத்தை வீட்டு முன் இருக்கும் மரமல்லி ஞாபகம் வந்தது. எனக்குப் பிடித்த மல்லிகள் கீழே உதிர்ந்து கிடக்கும் மரம்...
சிவு...என் ப்ரியமான தோழியே...
==Episode 5 | கலையின் பரிசுத்த அழகு ==
[[File:Teaestate1.jpg|400px|right]]
பின்னால் பெரும் சத்தம் கேட்டது. என்ன நடந்ததென்று தெரியவில்லை. அந்தரத்தில் சில நொடிகள் இருந்தேன். சைக்கிள் முன்னால் இரண்டடி தள்ளி ரோட்டில் விழுந்தேன். விழுந்தபின்புதான் நினைவு வந்தது. பின்னால் திரும்பிப் பார்த்தபோது, சீனியர்கள் மூவர் பைக்கில் கீழே விழுந்து கிடந்தனர். அருகில் விளையாட்டு மைதானத்திலிருந்து, நண்பர்கள் ஓடிவந்தார்கள். கீழே விழுந்த சீனியர் ஒருவர் எழுந்து என்னைத் தூக்கிவிட்டார் “ஒண்ணும் அடிபடலயே?” பதட்டமாகக் கேட்டார். கை, கால்களை உதறி விடச் சொன்னார். நண்பர்கள் சைக்கிளையும், பைக்கையும் தூக்கி நிறுத்தினார்கள். சைக்கிளின் பின் சக்கரம் லேசாக வளைந்திருந்தது. என் தவறுதான்; ஏதோ ஞாபகத்தில், பின்னால் வந்த பைக்கை கவனிக்காமல், வலதுபுறம் திரும்பிவிட்டேன். பின்னால் வந்த சீனியர்கள் இரண்டாம் கேட்டிற்குப் போவதற்காக நேராகச் செல்லவேண்டியவர்கள். எனக்கு ஆடிட்டோரியம் போகவேண்டும். பெரிதாய் காயங்கள் யாருக்குமில்லை. சிராய்ப்புக் காயங்கள்தான். யாரோ, பக்கத்திலிருந்த யுனிவர்சிடி கேண்டீனிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து தந்தார்கள். குடித்ததும், “ரூம்ல கொண்டுபோய் விடவா?” என்று ஒரு சீனியர் கேட்டார். “வேண்டாம், நான் ஆடிட்டோரியம் போகணும். போயிடுவேன். நீங்க போங்கண்ணா. தேங்ஸ்” என்று சொல்லிவிட்டு சைக்கிளை தள்ளிக்கொண்டு கிளம்பினேன். இன்னும் எங்கெங்கு சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. முழங்கை பின்னால் எறிந்தது.
ஆடிட்டோரியத்தின் முன்னால் ஏற்கனவே சைக்கிள் வரிசைகள். அன்று மாணவர் அமைப்பின், ஒரு நிகழ்ச்சி. பேராசிரியர்கள், சில உறுப்பினர்களின் பேச்சுக்கள் முடிந்ததும், ஒரு மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் இருந்தன. பாலாவின் பரதநாட்டியம் இருந்தது. நான் வந்தது பாலாவின் பரத நடனத்தைப் பார்ப்பதற்காகத்தான். 
பாலா என்கிற பாலசரஸ்வதி, சிவு-வின் நெருங்கிய நண்பர். வேளாண் பொறியியல் வகுப்பு. எனக்கு அப்போது பரதநாட்டியத்தில், ஸ்ரீநிதி ரங்கராஜனை மிகவும் பிடிக்கும். பெரும் மோகமே இருந்தது. கலையும், அழகும் ஒன்றுசேர்ந்த தெய்வாம்சம் தளும்பும் முகம். எனக்கு பாலாவைப் பார்க்கும்போதெல்லாம், ஸ்ரீநிதி ஞாபகம் வருவார். ஸ்ரீநிதி நிகழ்ச்சிகள் பார்க்கும்போது பாலா ஞாபகம் வரும். பரதநாட்டியத்தில் எனக்கு அறிதல் குறைவு. பாலாவுடன் பரிச்சயம் ஏற்பட்ட பிறகுதான், பரதநாட்டியத்தை இன்னும் அணுகி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் உண்டானது. ஒருமுறை ட்ரைமெஸ்டர் விடுமுறையில் திருமங்கலத்தில் இருந்தபோது பாலாவிற்கு ஒரு கடிதம் எழுதினேன், பரதநாட்டியத்தை இன்னும் அதிகமாக, ஆத்மார்த்தமாக எப்படி ரசிப்பதென்று. நான் இன்னும் மேலோட்டமாகத்தான் ரசிக்கிறேன் என்று எனக்கே புரிந்தது. ஒரு வாரமாயிற்று, பாலாவிடமிருந்து எந்த பதிலுமில்லை. என் கடிதத்திற்கு பாலா பதில் போடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் பத்தாவது நாள், ஏ4 காகிதத்தில் ஐந்து பக்கங்களில், முத்திரை, அடவு, ஜதி, பாணி...எல்லாவற்றையும் விளக்கி, எடுத்துக்காட்டுக்கு படங்களை ஒட்டவைத்து...ஒரு நீண்ட கடிதம் பாலாவிடமிருந்து வந்தது. எனக்கேற்பட்ட ஆச்சர்யத்துக்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. வீட்டில் ஒருமுறை கடிதத்தை படித்துவிட்டு, அன்று சாயங்காலம் அரசபட்டி ரோட்டிலிருக்கும், நூலகத்திற்கு எதிரில், காமாட்சி அம்மன் கோவிலுக்கு கடிதத்தை சட்டைப் பையில் வைத்து எடுத்துக்கொண்டு போய், அங்கு ஒருமுறை மண்டபத்தில் வைத்து படித்தேன். பாலாவின் மேல் மரியாதையும், கனிவும், அன்பும் பலமடங்கு கூடியிருந்தது.
பாலா அன்று ஆடிட்டோரியத்தில், ஒரு சீனியருடன் சேர்ந்து இரண்டு பாடல்களுக்கு நாட்டியம் ஆடினார். ஒன்றில் சிவன் வேடம். ப்ரமாதப்படுத்தியிருந்தார். சீனியர் “நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கன்ணம்மா...”விற்கு ஆடினார். எனக்கு என்னவோ சீனியர் ஆடியது, செமி-பரதநாட்டியம் போலிருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் பாலாவிடமே கேட்டுக்கொள்ளலாம் என்றிருந்தேன். தோட்டக்கலை சீனியர் கங்கா, ஜென்சியின் “ஒரு இனிய மனது” இனிமையாக பாடினார். நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டிருந்தார்கள். சிவு-வும், நானும் படிகளில் கீழிறங்கி நூலகத்தின் முன் வராண்டாவில் நின்றுகொண்டிருந்தோம். “ஏண்டா, பேண்ட்டெல்லாம் மண்னா இருக்கு?” நான் வரும்போது பைக் மோதி கீழே விழுந்ததைச் சொன்னேன். “அடப்பாவி, மருந்து போட்டியா இல்லயா?” “ரூமுக்குப் போயி போடணும்” என்றேன். ”நேத்து படம் புடிச்சிருந்ததா உனக்கு?” என்று கேட்டேன். முந்தைய நாள் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கனகதாராவில் “க்ளிஃப் ஹேங்கர்” பார்க்கப் போயிருந்தோம். வரும்போது, எனக்கும் சிவு-விற்கும், யார் முதலில் காலேஜ் போய்ச் சேருவதென்று ஒரு சின்ன சைக்கிள் ரேஸ் நடந்தது. ட்ராஃபிக்கிற்குப் பயந்து நான்தான் நடுவில் நிறுத்திக்கொண்டேன். “பரவால்ல...” என்றார்.
கிளம்பிச் செல்லும் எல்லாப் பெண்கள் நடுவிலும் என் கண்கள் யாரையோ தேடியதைப் பார்த்து, “அலையாத, மேனகா வரல...” என்றார். நான் மெலிதாய் சிரித்துக்கொண்டு, “ஏன், இன்னிக்கு காலையில க்ளாஸூக்கு வரும்போது காதுல பஞ்சு வச்சிருந்தாங்க?” என்றேன். சிவு பதில் சொல்லுமுன், பாலா படியிறங்கி வந்தார். நான், நாட்டியம் நன்றாயிருந்ததாக பாலாவிற்கு வாழ்த்து சொன்னேன்.
மறுநாள் மாலை பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் போகலாம் என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.
***
[[File:Teaestate2.jpg|400px|right]]
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் புதிய கோவில். அப்போதுதான் மெதுவாய் பிரபலமடைந்து வந்தது. தில்லை நகர் ஸ்டாப்பில் இறங்கி கலை பேக்கரி அருகே, மண்ரோட்டில் நடந்து கொஞ்சதூரம் உள்ளே செல்லவேண்டும். ஸ்டாப்பில் இறங்கியபோது அப்போதுதான் பாலாவை பார்த்தேன். மென்சிவப்பு உடையில். நெற்றியில் சந்தனக் கீற்று. என்னுள்ளே ஏதோ உடைந்தது. அது “நான்” ஆகத்தான் இருக்கவேண்டும். என் வார்த்தைகள் மௌனமாகிவிட்டன. குருவும், ஹேமாவும், சிவு-வும் பேசிக்கொண்டு வந்தார்கள். குரு “அடுத்த பாரதியார் பிறந்த நாளை கலை பேக்கரில கொண்டாடலாமா?” என்றான். நான் குனிந்தவாறே தலையசைத்தேன். நிமிர்ந்து பாலாவை மறுபடி பார்த்தால் அழுதுவிடுவேன் போலிருந்தது.
சூரியன் மறைந்து வெளிச்சம் இன்னும் குறையாமல் இருந்தது. மெலிதாய் காற்று வீசிக் கொண்டிருந்தது. கோவிலில் கூட்டமில்லை. சாமி கும்பிட்டுவிட்டு, ப்ரசாதம் வாங்கிக்கொண்டு மேற்குப் பக்கம் கல்லின் மேல் உட்கார்ந்தோம். கோவில் வெளிப்புறச் சுவர் வேலை நடந்துகொண்டிருந்ததால், சிமிண்ட்டும், பலகைகளும் ஆங்காங்கே கிடந்தன. “என்னாச்சு உனக்கு, ஏன் கம்முன்னு இருக்கே ரொம்ப நேரமா?” சிவு கேட்டார். நான் ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்தேன். கொஞ்சமாய் நிமிர்ந்தபோது, பாலாவின் முகத்திற்கு மேல், வானத்தில் மஞ்சளும், சிவப்பும், ஆரஞ்சுமாய்...சூரியனின் தீற்றல். ”ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய: ப்ரபவதி...”
நான் கண்மூடிக்கொண்டேன்.
==Episode 6 | தாய்மை சூழ் உலகு... ==
[[File:tajmahal.png|400px|right]]
மல்லிகா (அம்மு) வும், நானும் லக்ஷ்மி மில்ஸ் வீட்டின் மொட்டை மாடியில் விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்திருந்தோம். திருமணமாகி இரண்டாவது வருடம் என்று நினைக்கிறேன். சுற்றிலும் புத்தகங்களும், காகிதங்களும் பரவிக் கிடந்தன. லேப் டாப் திறந்திருந்தது. கல்லூரி புகைப்படங்களை, அம்முவிற்கு காட்டிக்கொண்டிருந்தேன். அம்முவும், அம்மாவுடன், நான் கல்லூரியில் முதலாமாண்டில் இருக்கும்போது, பழைய விடுதியில் பார்க்க வந்திருக்கிறார். காற்றில் பக்கத்து வீட்டின் தென்னை மர இலைகள் சப்தமெழுப்பிக் கொண்டிருந்தன. ஷிஃப்ட் மாற்றத்திற்கான சைரன் ஒலி மில்லிலிருந்து கேட்டது. நினைவுகள், அற்புதமான அந்த நான்கு வருடங்களை சுற்றிச் சுழன்றன. மனது, வரிசையாய் இல்லாமல், கலந்து கலந்து மனதில் பதிந்தவைகளை மேல் கொண்டுவந்து கொண்டிருந்தது.
தாஜ்மஹாலில், மேனகாவுடன் எடுத்த ஃபோட்டோ லேப் டாப் திரையில் வந்தது. முன்னரே மேனகா பற்றி அம்முவிடம் சொல்லியிருக்கிறேன். “தப்பா லாங் ஷாட் ஆயிடுச்சி, அம்மு. டென்ஷன் வேற, ஃபோட்டோ எடுத்த சரணுக்கு. எனக்கும்தான். இந்த ஃபோட்டோ எடுத்து முடிக்கிற வரைக்கும் கொஞ்சம் படபடப்பாதான் இருந்தது” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.
அது ஒரு நீண்ட கனவு நிறைவேறிய பொக்கிஷ கணம். தாஜ்மஹாலில், மேனகாவுடன் தனியாக ஃபோட்டோ எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது, கல்லூரியின் நான்காம் வருடத்தில் ஆறு மாதக் கனவு. ஆல் இண்டியா டூரின் பார்க்கப் போகும் இடங்களின் விபரங்கள் தெரிந்ததுமே அக்கனவு துளிர்விட்டது. இது சாத்தியமாகுமா? இதை எப்படி சாத்தியப்படுத்தப் போகிறேன்? என்று யோசித்துக்கொண்டேயிருந்தேன். தாஜ்மஹாலில் ஃபோட்டோ எடுக்க வாய்ப்பு கிடைத்தாலும், தனியே எடுக்க வாய்ப்பு கிடைக்குமா? எப்படி அங்கு மேனகாவிடம் கேட்பது? கல்லூரியின் முதல் இரண்டு வருடங்கள், மேனகாவின் கண்களைப் பார்ப்பதற்கே தைரியம் வராது. மூன்றாம் வருடத்தில்தான் கொஞ்சம் பரபரப்பு குறைந்திருந்தது. இருந்தும், மேனகா இருக்கும் கெமிஸ்ட்ரி ப்ராக்டிகல் வகுப்புகளில், கண்ணாடி குடுவைகளை கீழே போட்டு உடைத்துவிடாமலிருக்க ப்ரயத்தனப்படவேண்டியிருந்தது.
ஆக்ராவில், பஸ்ஸிலிருந்து இறங்கி மஹாலின் வெளிப்புற முதல் நுழைவாயிலில் நுழைந்ததுமே, மனம் தவிக்க ஆரம்பித்தது. எப்படியாவது மேனகாவுடன் ஃபோட்டோ எடுத்துவிட வேண்டுமென. கடவுளை வேண்டிக்கொண்டேன், இதை மட்டும் சாத்தியப்படுத்தி விடு என்று. தூரத்திலிருந்தே பார்வையில் விழுந்து அணைத்துக்கொண்ட அந்த வெண்பளிங்கு மஹாலின் முதல் தரிசனம் மிகுந்த பரவசம் தந்தது. தாமு, கார்த்தி, ச்ரண், ராம்-உடன் சுற்றி வந்தேன். சிவு கண்ணில் படவில்லை. 
அது நிகழ்ந்தது...அது எப்படி, எந்த நேரத்தில் நடந்தது, எப்படி அந்தக் கணம் வாய்த்தது, நான்தான் மேனகாவிடம் கேட்டேனா?, எப்படி அது சாத்தியமாயிற்று?...எந்த கேள்விக்கும் என்னிடம் இப்போது பதிலில்லை. என்ன நடந்தது என்று சுத்தமாக ஞாபகமில்லை. டூர் முடிந்து வந்து, ப்ரிண்ட் போட்டு ஃபோட்டோவை கையில் வாங்கி பார்த்தபோதுதான், நடந்தது கனவல்ல...ஃபோட்டோ எடுத்துக்கொண்டது நிஜம் என்று உரைத்தது. இதுநாள் வரையிலும், என் மனதுக்கு நெருக்கமான ஃபோட்டோ அது.
“இவங்க வேணி, என் புத்தக வாசிப்பை அதிகமாக்கினவங்க. கவிதையும் வாசிக்கச் சொல்லி கத்துக் குடுத்தவங்க. கவிதை எழுதுவாங்க” என்று அடுத்த ஃபோட்டோவில் வேணியை காட்டினேன். “சொல்லியிருக்கீங்க பாவா, அவங்க லெட்டர்லாம் காமிச்சிருக்கீங்க” என்று அம்மு சொன்னார். ஆம், வேணி எழுதிய கடிதங்கள் சேர்த்து வைத்திருந்தேன்; எப்படியும் ஒரு குயர் இருக்கும்; எல்லாமே புத்தகங்கள் பற்றி, கவிதைகள் பற்றி, கவிதை எழுதுவது பற்றி, எடுத்துக்காட்டிற்கு கவிதைகள் கோட் பண்ணி...அப்பா, எத்தனை பக்கங்கள்; வேணியின் ஒரு கடிதம் குறைந்தது பதினைந்திலிருந்து இருபது பக்கங்கள் இருக்கும்.
அடுத்த ஃபோட்டோ, ரேணுவுடனும், சுகன்யா, சிவு-வுடனும், பேரூர் கோயில் முன்னால் எடுத்தது. கல்லூரி வாழ்க்கையில் பேரூர் கோவில் மறக்க முடியாத நினைவுகள் கொண்டது. சைக்கிளில் விடுதியிலிருந்து கிளம்பி, பின்வழியாக பூசாரிபாளையம் வந்து ரோடு கிராஸ் செய்து குறுக்கு பாதையில் சென்றால் வெகு சீக்கிரம் கோவில் போய்விடலாம். கோவிலுக்குள்ளே விஜயா பதிப்பகத்தின் சிறிய பெட்டிக்கடை ஒன்றிருந்தது. அங்கு புத்தகங்கள் வாங்குவதுண்டு. பாலாவின் “கரையோர முதலைகள்” அங்குதான் வாங்கினேன். கோவில் உள்ளேயே மண்டபத்தில் உட்கார்ந்து ஒன்றிரண்டு மணிநேரம் படித்துவிட்டு, இரவுணவிற்கு விடுதிக்கு திரும்பியதுண்டு. வருடா வருடம் நாட்டியாஞ்சலி விழா நடக்கும். ஒருமுறை மாளவிகா சருக்கையின் நாட்டியம் கண்டு பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தது ஞாபகம் வந்தது.
அடுத்த ஃபோட்டோவில் கயல்விழி-யை காண்பித்தேன். “இவங்களும் நிறைய புக் படிப்பாங்க. ஆனால், பெரும்பாலும் இங்கிலீஷ் புக்ஸ். இவங்க என்னென்ன புக் படிக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆசையாருக்கும். ஆனா, அப்ப இவங்ககிட்ட பேசுறதுக்கு ஒரு தயக்கம் இருந்துட்டே இருக்கும் ஃபர்ஸ்ட் இயர்ல. ஒருநாள், க்ளாஸூக்கு ஒரு புக் கொண்டுவந்து படிச்சிட்டிருந்தாங்க. ப்ரொஃபஸர் வந்ததும் புக்கை சேர் கீழே வச்சாங்க. அது காலின்ஸ், லேப்பியரொட “ஃப்ரீடம் அட் மிட்நைட்”. அந்த ஆதர்லாம் அப்பதான் நான் புதுசா கேள்விப்படுறது” என்றேன்.
“நண்பர்கள் இல்லைனா நான் யுஜி முடிச்சிருப்பேனா-ன்னு சந்தேகம்தான் அம்மு. எத்தனை உதவி! எத்தனை பரிவு! சிவு, தாமு...மாதிரி நட்பு கிடைக்க நான் என்ன தவம் செஞ்சேனோ?... பேர் சொல்லணும்னா எங்க யுஜி-லருந்த எல்லார் பேரும் சொல்லணும்.
ஒரு தடவை, ஆல் இண்டியா டூர் அப்பதான், பெங்களூர் ரயில்வே ஸ்டேஷன்ல, ட்ரெய்ன் ஏறதுக்கு நாலாவது ஃப்ளாட்ஃபார்ம் போகணும். என்னால என்னோட சூட்கேஸை தூக்கிட்டு நடக்க முடியல. பைத்தியக்காரத்தனமா, நிறைய புக்ஸ் உள்ள வச்சி கொண்டுவந்துருந்தேன். சிவு பார்த்துட்டு “நீ நடப்பா, நான் எடுத்துட்டு வாரேன்” என்று சொல்லிவிட்டு சூட்கேஸை எடுத்துக்கிட்டாங்க. சிவு-னாலயும் தூக்கறதுக்கு கஷ்டமாருந்தது. இரண்டு கையையும் கைப்பிடில வச்சி தூக்கி ஃப்ளாட்ஃபார்ம் ஸ்டெப்ஸ்-ல ஒவ்வொரு படியிலயும் வச்சி தூக்கிட்டு வந்தாங்க. எனக்கு கண்ல தண்ணியே வந்துடுச்சு அம்மு. எதைச் சொல்றது...எதை விடுறது...எங்களுக்கு ரெண்டு கிராப் ப்ரொடக்‌ஷன் கோர்ஸ் இருந்தது. கொஞ்சமா நிலம் கொடுத்து, நாங்களே எல்லாம் பண்ணனும் அதுல - நடுறதுலருந்து, தண்ணி பாச்சறது, களையெடுக்கறது...இப்படி. என்னோட ஃப்ரெண்ட்ஸ் இல்லைனா...அதெல்லாம் தாண்டி நான் வந்திருப்பேனான்னே தெரியல.” பேசிவிட்டு கொஞ்ச நேரம் அமைதியாயிருந்தேன்.
என்னவோ நினைத்துக்கொண்டவன் போல், “பொண்ணுங்க நீங்கல்லாம், மனசளவுல சீக்கிரமே முதிர்ச்சியாயிடறீங்கள்ல அம்மு. எத்தனை மதர்லியா இருக்கீங்க. இப்ப திரும்பி நினைச்சுப்பார்த்தா, என்கூட யுஜி-ல படிச்ச பதினாறு பொண்ணுங்களும் தேவதை மாதிரிதான் தெரியறாங்க. இப்ப இருக்குற மெசூரிட்டியோடயும், தெளிவோடும் இன்னொரு தடவை யுஜி படிக்கலாம்போல இருக்கு...” சொல்லிவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டேன்.
அம்மு என்கிற அம்மா தேவதை தோளில் சாய்த்துக்கொண்டது
==Episode 7 | குறிஞ்சியின் யட்சி... ==
[[File:124.png|400px|right]]
காற்று தென்னை மரங்களையும், வேப்ப மரங்களையும் அசைத்துக்கொண்டிருந்தது. ஆனி கடைசியிலும், ஆடியிலும் லக்ஷ்மி மில்ஸ் குடியிருப்புகளில், காற்று மாலை வேளைகளில் அதிகமாகத்தானிருக்கும். அம்முவின் வீடிருக்கும் இந்திரா காலனியில், விசாலமான தெருக்கள். குறுக்குத் தெருக்கள் மிக நேர்த்தியாய் நேர்கோட்டில் இருக்கும். எல்லா வீடுகளிலும் மரங்கள். தென்னை மரமோ, வாழை மரங்களோ...எல்லா வீடுகளிலும் ஏதாவது மரம் இருக்கும். அம்முவின் வீட்டில் கொய்யா மரமும், தென்னை மரமும் இருந்தது. மல்லியும், முல்லைச் செடியும் கூட. கொய்யா மரத்திற்கும், வீட்டின் உள்வாசலுக்கும் இடையில் மாவாட்டும் உரல் போடப்பட்டிருக்கும். மாலை வேளைகளில், அம்மு மாவாட்டிக் கொண்டிருக்கும்போது, பக்கத்தில் சேர் போட்டு உட்கார்ந்து, பேசிக் கொண்டோ புத்தகம் படித்துக்கொண்டோ இருப்பேன். ஒருமுறை அம்மு மாவரைக்கையில், உதவி செய்வதற்காய், அரைக்கும்போது மாவினை கையால் தள்ளி விடலாம் என்று உரல் முன்னால் சேரைத் தள்ளி உட்கார்ந்தபோது, ”சரியாய் தள்ளுவீங்களா? விரல்கள் பத்திரம்” என்று சிரித்துக்கொண்டே அம்மு சொன்னார்.
இரவுணவை முடித்துவிட்டு வெளித் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டால், உடல் தழுவும் காற்றும், எஃப்.எம் ரேடியோவில் பக்கத்து வீடுகளிலிருந்து கேட்கும் ராஜாவின் பாடல்களும் மயக்கம் உண்டாக்கும். அந்த நாட்களில் அம்மு தினமும், தலையில் முல்லைப் பூ வைத்துக்கொள்வார். எனக்கு முல்லைப் பூக்களின் மணம் மிகவும் பிடிக்கும். கூடவே மகிழம் பூவின் மனமும். சம்பங்கி மாலையை பூஜை அறையில் சாமிக்கு சார்த்திவிட்டு, மறுநாள் காலையில் அறை திறந்ததும் ஒரு மணம் வருமே...அந்த நறுமணம் கண்மூடி ஆழ்ந்து சுவாசிக்க வைக்கும்.
கொஞ்ச நேரம் திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு, நானும் அம்முவும் ஒரு நடை சென்றுவரலாம் என்று எழுந்தோம். தெருவில் இடது பக்கம் நாலைந்து வீடுகள் தாண்டினால், மில்லின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைய சின்ன வழியிருக்கும். வீடுகளில் தொலைக்காட்சிகளின் சப்தம். மில்லின் உள்ளேதான் அம்மு படித்த பள்ளி இருந்தது. குடியிருப்பு பகுதியின் நடுவில் நடந்துசென்று இடதுபுறம் திரும்பியதும் பள்ளியின் விளையாட்டு மைதானம். மைதானத்தின் வடக்கு மூலையில் ஒரு விநாயகர் கோவில். கோவிலில், வெளிச்சுவருக்கு உள்ளே சிமிண்ட் தரை முழுதும் மர இலைகள் விழுந்துகிடந்தன. “தினசரி யாரும் க்ளீன் பன்ணமாட்டாங்களா அம்மு?” என்றேன். “பூஜை பண்ற ஐயர் பண்ணுவாரு. ப்ரதோஷத்துக்கு மட்டும்தான் கூட்டமா இருக்கும்” என்றார் அம்மு. கோவில் அந்தகாரத்தில் இருந்தது. விளக்கு ஒன்று விநாயகர் சந்நிதானத்தில் எரிந்துகொண்டிருந்தது.
நாங்கள் விளையாட்டு மைதானத்தை சுற்றிக்கொண்டு நடந்தோம். அம்முவின் அப்பா, அந்த மில்லில்தான் வேலை பார்த்தார். அம்மு அப்பாவின் அந்த நாட்களைப் பற்றி பேசிக்கொண்டு வந்தார். நாங்கள், மில்லின் உள் மெயின் ரோடைத் தொட்டு, சோடியம் வேப்பர்களின் வெளிச்சத்தில், முதல் கேட்டை நோக்கி நடந்தோம். அம்முவின் அப்பா இறந்தபின், அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டார்கள், அந்தக் கஷ்டத்திலும் அம்மு எப்படி D.Pharm படித்து முடித்தது என்று சொல்லிக்கொண்டு வந்தார். கடந்த காலங்களைப் பற்றிப் பேசினாலே மனது மிகவும் நெகிழ்ந்து நொய்மையாகி விடுகிறதுதானே?
மெயின் கேட்டில் வெளி வந்து, கோவை-பல்லடம் ரோட்டில், வலது பக்கம் ஓரமாகவே மண்ணில் இறங்கி நடந்தோம். நான் அம்முவின் மனநிலையை மாற்ற நினைத்து, எதிரில் சாலைக்கு அப்புறம் இருந்த, “லஷ்மி கார்டு குளோத்திங்” ஆலையை சுட்டிக்காட்டி, ஹேமா-வோட வீட்டுக்காரர் இங்கதான் வேலை செய்றாராம். அவங்க வீடு ஒண்டிப்புதூர்லதான் இருக்கு போலருக்கு. ஒருநாள் போயிட்டு வரலாம்” என்றேன். ஹேமா சிவு-வின் ஃப்ரெண்ட் என்பது அம்முவிற்குத் தெரியும். பேச்சு அங்கு தொட்டு இங்கு தொட்டு மறுபடி என் கல்லூரி வாழ்க்கையின் நிகழ்வுகளில்தான் நிலைகொண்டிருந்தது.
***
பேருந்து சிம்லாவை நெருங்கிக்கொண்டிருந்தது. முன்னிரவு எட்டு மணி. வெளியில் உடல் நடுக்கும் குளிர். ஜன்னல்களில் நீர்த் திவலைகள். நண்பர்களில் யாரோ சொல்லி, ம்யூசிக் ஸிஸ்டத்தில், “புது வெள்ளை மழை...” பாடிக்கொண்டிருந்தது. நான் பின்சீட்டுக்களில் ஒன்றில் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தேன். மனது அந்தக் குளிரை அனுபவித்துக்கொண்டிருந்தது. அனைத்திந்தியப் பயனத்தில், அடுத்தநாள் குஃப்ரி செல்வதாக ஏற்பாடு.
சிம்லாவிற்குள் சென்று பஸ் இரவுணவிற்காக நின்றது. நண்பர்கள் இற்ங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். வெளியில் குளிர் யாரோ ஐந்து டிகிரி இருக்கலாம் என்றார்கள். பேருந்தின் முன்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. நண்பிகள் எழுந்து ஒரு சீட்டினருகில், கும்பலாய் நின்றிருந்தார்கள். கேட்டு விஷ்யமறிந்த போது, சிவு-விற்குத்தான் உடம்பு சரியில்லாமல் போயிருக்கிறது. அதிகக் குளிரினால் உண்டாகியிருக்கலாம். கயல்விழி சிவு-வின் கைகளைத் தேய்த்து விட்டுக்கொண்டிருந்தார். பாதங்களை ஈஸ்வரி தேய்த்துக் கொண்டிருந்தார். என்னுள் மெல்லிய பதட்டம் எழுந்தது. “என்னாச்சு சிவு?” என்று மனதுள் கேட்டுக்கொண்டே, மனதிற்குள் சிவு-வின் கைகளைப் பிடித்துக்கொண்டேன்.
***
[[File:125.png|400px|right]]
அனைத்திந்தியப் பயணத்தின்போது, பெங்களூரில் மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். இண்டோ அமெரிக்கன் ஹைப்ரிட் சீட்ஸ், IIHR...இன்னும் சில இடங்கள் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விடுதியின் கீழேயே ரெஸ்டாரண்ட் ஒன்று இருந்தது.
இரண்டாம் நாள் மாலை, சுகன்யாவின் உறவினர் வீட்டிற்கு நண்பர்கள் சிலரை சுகன்யா அழைத்துப் போயிருந்தார். அங்கேயே இரவுணவு சாப்பிட்டோம். சுகன்யா கன்னடத்தில் பேசுவதை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
மூன்றாம் நாள், முன்னிரவு ஏழு மணி இருக்கும். சிவு கையில் ஒரு உடையுடன் அறைக்கு வந்தார். “என்னப்பா பண்ற?” கேட்டுக்கொண்டே இடதுபக்கம் சேரில் உட்கார்ந்துகொண்டார். நான் பாலாவின் “இனியெல்லாம் சுகமே” படித்துக்கொண்டிருந்தேன். புத்தகத்தின் முன் அட்டையை சிவு-விடம் காட்டினேன். கையில் ஊசி வைத்து கொண்டு வந்த உடையில் ஏதோ தைக்க ஆரம்பித்தார். “படிக்கறதெல்லாம் சரிதான். முடிச்சிட்டு கீழே இறங்கிடணும்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். ”“உள்ளம் கவர் கள்வன்” படிச்சேன். ரொம்ப நல்லாருந்தது. நீ படிச்சிட்டியா?” என்று கேட்டுக்கொண்டே பற்களால் நூலைக் கடித்தார். பேச்சு, பாலா, ஜே.கிருஷ்ணமூர்த்தி, அசோகமித்திரன், தி.ஜா...என்று சுற்றியது. “சரி, வா...வெளியில போகலாம். சார் பார்த்தாருண்ணா, இங்க இந்த ரூம்ல என்ன பண்ற-ன்னு திட்டப்போறார்” என்று எழுந்தார்.
விடுதியை விட்டு வெளியில் வந்து மெயின் சாலையில் இடதுபுறமாகவே நடந்தோம். மறுபடி இடதுபுறம் வளைவு திரும்பியதும், மெஜெஸ்டிக் பேருந்து நிலையம் ஒளிவெள்ளத்தில் எதிர்ப்புறம் தெரிந்தது. பேச்சு பாலாவின் புத்தகங்களினூடே இருந்தது. தி.ஜா-வின் பெண் பாத்திரங்களைப் பற்றி நான் சொல்லிக்கொண்டு வந்தேன். தி.ஜா-வின் மீதான சில சீனியர்களின் அவதானிப்பு பற்றி சொன்னேன். ”அகிலன் சொல்றாரு, தி.ஜா. ப்ராக்டிகலாவே இல்ல; பொண்ணுங்க அழகைக் கண்டு பயப்படுறாரு; அதை நேருக்கு நேரா சந்திக்க முடியாம, கடவுள் ரேஞ்சுக்கு உசத்திர்றாரு-ன்னு”. “உண்மைதானே” சிவு சிரித்தார் ”அன்னிக்கு, லேடீஸ் ஹாஸ்டல் வந்துட்டு விஸிட்டர்ஸ் ரூம்ல சேர்ல எப்படி உட்கார்ந்திருந்தேன்னுதான் பார்த்தேனே” என்றார். அன்று, சிவு-விடம் ஜெராக்ஸ் எடுக்க வாங்கியிருந்த வகுப்புக் குறிப்புகளை, திருப்பிக் கொடுத்துவிட்டு, ஊரிலிருந்து சிவு-வைப் பார்க்க வந்திருந்த அப்பாவையும் பார்த்துவிட்டு வரலாம் என்று போயிருந்தேன். விஸிட்டர்ஸ் ஹாலில், சேரின் நுனியில் ஒரு அமைதியில்லாத்தனத்துடன் உட்கார்ந்திருந்தேன்.
மெஜஸ்டிக் முன்னால் இன்னொரு ரெஸ்டாரண்ட் பக்கத்திலிருந்த தியேட்டருக்கு அருகில் மறுபடியும் திரும்பினோம். தள்ளு வண்டிகளில் வாழைப்பழங்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். பானி பூரி வண்டிகளும் ஒன்றிரண்டு இருந்தன. நேரே சென்று திரும்பினால், ஒரு சுற்று சுற்றி நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு போய்விடலாம். “டீ சாப்பிடலாம் சிவு” என்றேன். முக்கிலிருந்த பெட்டிக்கடையில் டீ வாங்கிக்கொண்டு கடைக்கு அருகிலேயே நின்றுகொண்டோம். சிவு-திருமங்கலம் வீட்டிற்கு வந்திருந்தபோது, மதிய உணவு முடித்துவிட்டு வீட்டு படியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு ஹேமா ஆனந்ததீர்த்தனின் சிறுகதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் இப்படி பேசிக்கொண்டிருப்பதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்கார அம்மா, சிவு சென்ற மறுநாள், என் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார் “என்ன, இப்படி பேசிக்கிறாங்க” என்று. அம்மா சிரித்துக்கொண்டே “என்னடா பேசுனீங்க அப்படி?” என்று கேட்டார். “ஒண்ணுல்லம்மா, ஒரு கதையைப் பத்தி பேசிட்டிருந்தோம்” என்றேன். நினைவினால் புன்னகைத்துக்கொண்டேன்.
”அழகை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்துறதுல என்ன தப்பு சிவு?. ஒண்ணுமே பண்ணமுடியுமாம திகைச்சு நிக்கும்போது, ஏதாவது ஒரு சரியான வழி கண்டுபிடிச்சு சேன்னலைஸ் பண்ணலேனா, அந்த உணர்வு, எனர்ஜி, தப்பான வழியில போயிடாதா?. அழகை தெய்வமாக்குறது ஒரு தப்பித்தல்னா, வேற என்ன வழியிருக்கு?. கல்யாணம் கூட ஒரு சமூக சேன்னலைசேஷன்தானே?” என்றேன்.
பேசிக்கொண்டிருக்கும்போது மேனகா-வின் முகம்தான் மனதில் இருந்தது. அது சிவு-வுக்கும் தெரிந்திருந்தது. ”குறுந்தொகையில கபிலரோட ஒரு பாட்டு இருக்கு சிவு. நீ படிச்சிருக்கிறியா?. கபிலர் மலையப் பத்தி, காட்டைப் பத்தித்தான் நிறைய பாடியிருக்கார். சுனைப்பூ குற்று தைஇவனக்கிளி...ன்னு ஆரம்பிக்கும். சரியா வரிகள் ஞாபகமில்லை. ஆனா, அர்த்தம் ஞாபகமிருக்கு “வனத்தடாகத்தில் பூப்பறித்து மாலைகட்டி அணிந்து காட்டில் கிளியோட்டும் பெரிய கண் அழகி அறியமாட்டாள். தூங்கும் யானைபோல பெருமூச்சுவிட்டு என் மனம் அவள் நினைவைத் தொடர்வதை...”
நான் பெருமூச்சு விட்டேன்.
மேனகா...குறிஞ்சியின் யட்சி...சந்திரி...
==Episode 8 ==

Revision as of 16:09, 22 November 2018