
<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="en">
	<id>http://horts.in/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D</id>
	<title>மார்க்ஸ் - Revision history</title>
	<link rel="self" type="application/atom+xml" href="http://horts.in/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="http://horts.in/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-05-07T15:18:44Z</updated>
	<subtitle>Revision history for this page on the wiki</subtitle>
	<generator>MediaWiki 1.37.2</generator>
	<entry>
		<id>http://horts.in/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&amp;diff=2672&amp;oldid=prev</id>
		<title>Raj at 05:00, 15 May 2020</title>
		<link rel="alternate" type="text/html" href="http://horts.in/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&amp;diff=2672&amp;oldid=prev"/>
		<updated>2020-05-15T05:00:44Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;table style=&quot;background-color: #fff; color: #202122;&quot; data-mw=&quot;interface&quot;&gt;
				&lt;col class=&quot;diff-marker&quot; /&gt;
				&lt;col class=&quot;diff-content&quot; /&gt;
				&lt;col class=&quot;diff-marker&quot; /&gt;
				&lt;col class=&quot;diff-content&quot; /&gt;
				&lt;tr class=&quot;diff-title&quot; lang=&quot;en&quot;&gt;
				&lt;td colspan=&quot;2&quot; style=&quot;background-color: #fff; color: #202122; text-align: center;&quot;&gt;← Older revision&lt;/td&gt;
				&lt;td colspan=&quot;2&quot; style=&quot;background-color: #fff; color: #202122; text-align: center;&quot;&gt;Revision as of 10:30, 15 May 2020&lt;/td&gt;
				&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot; id=&quot;mw-diff-left-l1&quot;&gt;Line 1:&lt;/td&gt;
&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot;&gt;Line 1:&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;diff-marker&quot;&gt;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f8f9fa; color: #202122; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #eaecf0; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;[[Category: Kalavathi]]&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class=&quot;diff-marker&quot;&gt;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f8f9fa; color: #202122; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #eaecf0; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;[[Category: Kalavathi]]&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;diff-marker&quot; data-marker=&quot;−&quot;&gt;&lt;/td&gt;&lt;td style=&quot;color: #202122; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #ffe49c; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class=&quot;diff-marker&quot; data-marker=&quot;+&quot;&gt;&lt;/td&gt;&lt;td style=&quot;color: #202122; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #a3d3ff; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;&lt;ins style=&quot;font-weight: bold; text-decoration: none;&quot;&gt;[[File:Karl_Marx_001.jpg|400px|right]]&lt;/ins&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;diff-marker&quot;&gt;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f8f9fa; color: #202122; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #eaecf0; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;ஒரு மகத்தான சிந்தனையாளர் பற்றி... நான் அறிந்து கொண்டிருக்கிற ...என்னை பாதித்த சில சிந்தனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் தோழர்களே.&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class=&quot;diff-marker&quot;&gt;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f8f9fa; color: #202122; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #eaecf0; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;ஒரு மகத்தான சிந்தனையாளர் பற்றி... நான் அறிந்து கொண்டிருக்கிற ...என்னை பாதித்த சில சிந்தனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் தோழர்களே.&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;diff-marker&quot;&gt;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f8f9fa; color: #202122; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #eaecf0; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;br/&gt;&lt;/td&gt;&lt;td class=&quot;diff-marker&quot;&gt;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f8f9fa; color: #202122; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #eaecf0; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;br/&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/table&gt;</summary>
		<author><name>Raj</name></author>
	</entry>
	<entry>
		<id>http://horts.in/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&amp;diff=2670&amp;oldid=prev</id>
		<title>Raj: Created page with &quot;Category: Kalavathi  ஒரு மகத்தான சிந்தனையாளர் பற்றி... நான் அறிந்து கொண்டிருக...&quot;</title>
		<link rel="alternate" type="text/html" href="http://horts.in/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&amp;diff=2670&amp;oldid=prev"/>
		<updated>2020-05-15T04:59:44Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Created page with &amp;quot;&lt;a href=&quot;/index.php/Category:Kalavathi&quot; title=&quot;Category:Kalavathi&quot;&gt;Category: Kalavathi&lt;/a&gt;  ஒரு மகத்தான சிந்தனையாளர் பற்றி... நான் அறிந்து கொண்டிருக...&amp;quot;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;New page&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[Category: Kalavathi]]&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு மகத்தான சிந்தனையாளர் பற்றி... நான் அறிந்து கொண்டிருக்கிற ...என்னை பாதித்த சில சிந்தனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் தோழர்களே.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆமாம் நான் குறிப்பிட்டது மார்க்ஸ் ஐத் தான்.&lt;br /&gt;
கார்ல் மார்க்ஸ் எனும் மாமனிதனைப் பற்றித் தான்.&lt;br /&gt;
முசு முசு வென்ற முடிக்குள், மூளையையே அதிகம் பயன்படுத்திய சிந்தனையாளனைப் பற்றித் தான்.&lt;br /&gt;
அவருக்கு நாடற்றவர் என்ற பெயருண்டாம்.&lt;br /&gt;
பொருத்தமான பெயர் தான்.&lt;br /&gt;
உலகைப் பற்றி சிந்திப்பவனை எப்படி நாட்டுக்குள் அடக்கி விட முடியும்...?&lt;br /&gt;
முடியாது.&lt;br /&gt;
அந்த நாடற்றவன் நாத்திகனாகவும் இருந்திருக்கிறான்.&lt;br /&gt;
காரணம் சதா  மனிதனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால் தெய்வம் பற்றி யோசிப்பதை தவிர்த்து  இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
புருசியா  பெற்றெடுத்த பெரும் சிந்தனையாளர்.&lt;br /&gt;
யூத குலத் தோன்றலான போதும், பின்னாளில் கிறிஸ்துவத்தை தழுவிய குடும்பத்து வாரிசு.&lt;br /&gt;
ஆயிரத்து எண்ணூற்றி பதினெட்டில் பிறந்த மார்க்ஸ், &lt;br /&gt;
சோபியா என்ற மூத்த சகோதரியோடு இரண்டு இளைய சகோதரிகளையும் பெற்றவர்.&lt;br /&gt;
ஒன்பதில் இந்த நான்கு பேர் மட்டுமே தப்பிப் பிழைத்தனர்.&lt;br /&gt;
வக்கீலான தந்தையுடனும், கண்டிப்பான அதே நேரத்தில் மிகவும் அன்பான , தன் தாயாருடனும் அதிக பாசம் வைத்தவர்.&lt;br /&gt;
இருப்பினும் தந்தை ஒருபடி உயர்ந்தே இருந்தார் மார்க்சின் மனதில்.&lt;br /&gt;
எனவே தான்  மார்க்சின் சட்டைப் பையில், தந்தையின் புகைப்படம் எப்பொழுதும் இருக்குமாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஹெஹல்யவாதியாய்... &amp;#039;மாற்றம்&amp;#039; என்ற வார்த்தையில்  தொடங்கியது தான் கார்லின் சிந்தனை.&lt;br /&gt;
&amp;#039;மாறிக் கொண்டே இருக்கும்&amp;#039; என்ற  தத்துவஞானி ஹெகெலின் வரிகளில் எங்கோ மாறுபட ‌தொடங்கினார் மார்க்ஸ்.&lt;br /&gt;
தேடல் தொடர்ந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மனித குல வரலாற்றின் மாற்றங்களுக்கு, மனித உழைப்பின் காரணங்களை ஆராய்ந்தார்.&lt;br /&gt;
உழைப்பின் மதிப்பில் பேதங்கள் இல்லாதவரை பிரச்சினைகள் கிடையாது என்பதறிந்தார்.&lt;br /&gt;
மிஞ்சிய &amp;#039;உபரிமதிப்பு&amp;#039;   மீண்டும் மூலதனமாகும் போது, வர்க்கபேதம் உருவாவதை உணர்ந்தார்...&lt;br /&gt;
உலகுக்கு உணர்த்தினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வறுமை வாட்டி ‌எடுத்த போதும், மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கம் குறித்து சிந்தித்து கொண்டு இருந்தார்.&lt;br /&gt;
எல்லாத் தத்துவங்களும் உலகம் எப்படி தோன்றுகின்றன, இயங்குகின்றன என்று சிந்தித்து கொண்டிருந்த வேளையில், உலகத்தை மாற்றி அமைப்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த பெரும் சிந்தனையாளன் மார்க்ஸ்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்! &lt;br /&gt;
நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை.ஆனால் உங்களுக்காக ஒரு பொன்னான உலகம் காத்திருக்கிறது என கூறி உலகத்தையே  திரும்பி பார்க்க வைத்த புரட்சியாளர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;மூலதனம்&amp;#039; என்னும் ஒரு மிகப்பெரிய மூலதனத்தை உழைக்கும் வர்க்கத்திற்கு கொடுக்க அவர் கொடுத்த &amp;#039;விலை &amp;#039;  அளவிடமுடியாதது.&lt;br /&gt;
இங்கிலாந்து பிரித்தானிய அருங்காட்சியகத்தில்,ஒவ்வொரு நாளும் பனிரெண்டு மணி நேரம் உழைத்து உருவானது தான் மூலதனம்.&lt;br /&gt;
பதினைந்து ஆண்டுகள் உழைப்பு அது.&lt;br /&gt;
மூலதனமே இல்லாதவன் உருவாக்கிய மிகப் பெரும் பொக்கிஷம் இந்த மூலதனம்.&lt;br /&gt;
மகனின் வறுமை கண்டு வருந்திய மார்க்சின் அன்னை, இந்த மூலதனத்திற்குப் பதிலாக வாழ்க்கைக்கு தேவையான மூலதனத்தை சிறிதளவேனும் சேர்த்து வைத்திருந்தால் குடும்பம் பிழைத்திருக்கும் என தாய்மை உணர்வில் வருத்திக் கூறியதாகக் கூட சொல்லப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாடு நாடாக, நாடு கடத்தப்பட்டாலும் அல்லது துரத்தப்பட்டாலும், அவரின் சிந்தனை ஓட்டம் நிற்க வில்லை.&lt;br /&gt;
சித்தாந்தம், அறிவியல், பொருளாதாரம் என அதுவும் விரிந்து படர்ந்து கொண்டே சென்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருமுறை வீட்டுப் பொருட்கள் அனைத்தும் ஜப்தி செய்ய பட்டு , &lt;br /&gt;
கைக்குழந்தையோடு வீதிக்கு வந்த  மார்க்ஸ் தம்பதி, இனி இழப்பதற்கு கூட ஒன்றும் இல்லை என்ற நிலையிலும், உழைப்பவர் பற்றி  சிந்திப்பதை நிறுத்திக் கொள்ளாத கொள்கை கொண்ட பொதுவுடமைவாதிகளாய் வாழ்ந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மதம் ஒரு அபின்.&lt;br /&gt;
ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்க பெருமூச்சு.&lt;br /&gt;
இதயமற்ற உலகின் இதயம்.&lt;br /&gt;
என்று குறிப்பிடுகிறார் மார்க்ஸ் அவரின் ஹெகெலிய கோட்பாடு குறித்த திறனாய்வில்.&lt;br /&gt;
வெகு ஜனங்களுக்கான வலி நிவாரணி தான் மதம் என்று குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;
மதம், இனம்,மொழி அனைத்தையும் தாண்டி ‌ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே சிந்தித்த மகத்தானவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
‌ஆயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி எட்டில், வெறும் இருபத்தி நான்கு பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை ஏங்கல்ஸுடன் இணைந்து  வெளியிட்டார்.&lt;br /&gt;
அது கிட்டத்தட்ட இருநூறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப் பட்டுள்ளது.&lt;br /&gt;
அது தான் &amp;#039;கம்யூனிச கட்சி அறிக்கை&amp;#039; எனும் புகழ் பெற்ற பொதுவுடைமை  அறிக்கை.&lt;br /&gt;
எக் காலத்திற்கும் பொருந்தக்கூடிய  கம்யூனிசத்தின் ஆவணமாக  விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மார்க்ஸ் பற்றி நினைத்தால்,  ஜென்னியும், ஏங்கல்ஸூம் அவருக்கும் முன்னால் நம் நினைவை நிறைப்பர்.&lt;br /&gt;
காரலின் ஒரு கரம் காதலுக்கானது என்றால் , மறுகரம் அவரின் நட்புக்கானது.&lt;br /&gt;
இந்த இரண்டும் தான் கார்ல் என்ற மாபெரும் புரட்சியாளனை, சிந்தனையாளனை இவ்வுலகிற்கு வழங்கிய மிக உயர்ந்த இதயங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜென்னி -&lt;br /&gt;
அழகான,அறிவிற்சிறந்த பிரபுத்துவ குடும்பத்தை சேர்ந்த மகள்.&lt;br /&gt;
காரலின் சிந்தனை தான் அவளையும் ஈர்த்தது.&lt;br /&gt;
நான்கு வயது முந்திப் பிறந்த போதும், காதல் ஜெயித்தது.&lt;br /&gt;
சிந்தனையாளனுக்கு அறிவுத்துணையாய் இருப்பேன் என உறுதி எடுத்துக் கொண்டவள்.&lt;br /&gt;
புரட்சி கொண்ட‌ மனதில், காதலும் கவிதையும் பிறக்க காரணமாகியவள்.&lt;br /&gt;
நீ குழந்தையாய் இருந்த காலந்தொட்டே உன்னை அறிவேனடா எனச் சொல்லி, தாயன்பையும் காதலில் கரைத்துக் கொடுத்தவள்.&lt;br /&gt;
ஒன்பது மொழிகள் அறிந்தவளாதலால், அவனின் சிந்தனைகளை மொழிமாற்றம் செய்யவும் பேருதவியாய் இருந்தவள்.&lt;br /&gt;
இசையும் ஓவியமும்  கூட அவளிடத்தில் இணைந்தே இருந்தனவாம்.&lt;br /&gt;
கலையும் காதலும் ஒருங்கே கூடியிருந்ததனாலோ என்னவோ பொறுமையும், சகிப்புத்தன்மையும் இறுதி வரை அவள் உடன் இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
காதல் கணவனுடனான காதலில் ஏழு குழந்தைகளைப் பெற்று, வறுமைக்கு ஒவ்வொன்றாக பறி கொடுத்து, இறுதியில் மூன்று பெண் பிள்ளைகளை மட்டும் வறுமைக்கு பயந்து, பாதுகாத்து வளர்த்து வந்தவள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வறுமை அவள் மார் வழியே இரத்தமாக வெளியேறிய போதும், கணவனின் சிந்தனையை சிறிதும் சலனப்படுத்தாதவள்.&lt;br /&gt;
பால் என்ற உணர்வில், கரு விட்டு வெளியேறிய பிறகும்,குழந்தை குருதி குடித்த நிமிடங்களை, அதன் வலியை, தனக்குள்ளேயே புதைத்தவள். &lt;br /&gt;
&lt;br /&gt;
பிறந்த குழந்தைக்கு தொட்டிலுக்கும் வழியில்லை.&lt;br /&gt;
இறந்து போய்விட்ட பிறகும் சவப்பெட்டிக்கும் காசு இல்லை என்ற நிலையிலும் காதல் வாழ்க்கையை, காரலுடன் தொடர்ந்தவள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
காதல் துளிர் விட்டு ,ஏழு  ஆண்டுகள் காத்திருந்து, கைபிடித்து கடைசி மூச்சுவரை கிட்டத்தட்ட முப்பத்தெட்டு ஆண்டுகள் கதலையும் வாழ வைத்து, காரலையும் வாழ வைத்த,  வறுமையிலும் அவன் சிந்தனைக்கு துணை நின்ற மகா மனுஷி அவள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரெட்ரிக் ஏங்கல்ஸ் -&lt;br /&gt;
இதயப்பூர்வமான நட்பு.&lt;br /&gt;
ஒருமித்த சிந்தனையாளர்கள்.&lt;br /&gt;
அந்த சிந்தனையே நட்பு வளர்த்தது.&lt;br /&gt;
முதல் சந்திப்பு பாரிஸு நகரில்‌.&lt;br /&gt;
முதல் சந்திப்பே பத்து தினங்களையும் கடந்து சென்றது.&lt;br /&gt;
பிறகு அந்த சந்திப்பு நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து சென்றது.&lt;br /&gt;
வசதியில் ஓரளவு உயர்ந்த ஏங்கல்ஸ், மார்க்ஸின்‌ வறுமையை துடைக்க, முடிந்த வரை, தன் வாழ்வு முடியும் வரை முயன்றார்.&lt;br /&gt;
உழைப்பவர்கள் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த காரலின் குடும்பத்திற்காக உழைத்த உயர்ந்த உன்னத நட்பு ஏங்கல்ஸ்யுடையது.&lt;br /&gt;
ஆங்கிலம் அறியாத காரலின் எழுத்துக்களை மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்த நட்பு , ஒரு கட்டத்தில் தானே எழுதி அதை காரலின் பெயரில் அச்சிட்டு சம்பாதித்து கொடுத்த உறவு ஏங்கல்ஸ்யுடையது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓராண்டு, ஈராண்டல்ல ...இருபது ஆண்டுகள் நண்பனுக்காக உழைத்த நட்பு ஏங்கல்ஸ்யுடையது.&lt;br /&gt;
எந்த வகையிலும் மார்க்சின் சிந்தனை சிதறக் கூடாது என சினேகிதனின் மகத்தான சிந்தனைக்கு துணை போன தூய நட்பு ஏங்கல்ஸ்யுடையது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜென்னியின் மறைவு மார்க்சை நடைப் பிணமாக்கியது. அடுத்த சில காலங்களிலே &lt;br /&gt;
மூத்த மகளின் மறைவு மார்க்சை  முழுவதுமாக முடக்கி போட்டது.&lt;br /&gt;
மூச்சு குழாய் அழற்சி நோயால் அவதிப் பட்டார்.&lt;br /&gt;
காதல் மனைவியின் இழப்பிற்கு பிறகு சரியாக பதினைந்து மாதங்கள் கழித்து நிரந்தரமாக அயர்ந்து போனார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மார்க்சின் மறைவு காலம் கடந்தும் காலமாக மாறி நிற்கிறது.&lt;br /&gt;
சிந்தனையாளன் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டான் என்று தன் நட்பின் மீளாப் பிரிவிற்கு மரியாதை செய்தார் ஏங்கல்ஸ்.&lt;br /&gt;
இன்று உலகமே கொண்டாடும் மார்க்சின் &lt;br /&gt;
இறுதிச் சடங்கில் எண்ணி பதினொரு பேர் தான் இருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அது ஏனோ என் கவிஞன் பாரதிக்கும் இப்படித்தான் இருபதுக்குள்ளே தான் முடிந்து போனது இறுதி யாத்திரை.&lt;br /&gt;
உலகை சிந்திப்பவர்களை, உலகம் சிந்திப்பதில்லையோ என்று கூட சிந்திக்க வைக்கிறது.&lt;br /&gt;
அவனும் வறுமையின் அடையாளமாகத் தான் வாழ்ந்தான்.&lt;br /&gt;
ஆனால் இவர்கள் இருவருமே மனித குல வரலாற்றில் மறையப் போவதில்லை.&lt;br /&gt;
காலத்தால் நிலைத்து நிற்கும் மாமனிதர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வடபகுதி லண்டனில் உள்ள ஹைஹேட்ஸ் கல்லறையில் ஜென்னிக்கு  அருகிலேயே தான் காதல் உறக்கத்தில், மூலதனத்தையும் புரட்டி கொண்டு உள்ளார் மார்க்ஸ்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அத்தனை காதல் காவியங்களையும் , வென்று மார்க்ஸ் ஜென்னியின் காதல் சரித்திரம் படைத்துள்ளது.&lt;br /&gt;
இருவரும் காதல் உறக்கத்தில்  உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மூலதனம் முதல் பாகம் மட்டுமே வெளி வந்த நிலையில், கார்ல் காதலுடன் துயில் கொண்டதால், இரண்டாம் பாகம் ஏங்கல்ஸ் என்ற நட்பின் முயற்சியால் , மார்க்சின் காலத்திற்கு பிறகு தான் வெளிவந்திருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தன் சொத்துக்களையும் நட்பின் பெண் பிள்ளைகளுக்கு பகிர்ந்தளித்த ஏங்கல்ஸூம் நட்போடு போய் சேர்ந்தார்.&lt;br /&gt;
அவரின் இறுதி சடங்கில் , மார்க்சின் மகள் எலினா, என் தந்தையின் நிலையில் இருந்தவரையும் இழந்தேன் .&lt;br /&gt;
இரு மகத்தான மனிதர்கள் மறைந்தனர் என துயருற்றதாக சொல்லப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கிட்டத்தட்ட அறுபத்தைந்து ஆண்டுகள் உலக வாழ்க்கையில், பெரும்பாண்மையை வறுமைக்கே ஒப்புக் கொடுத்த போதும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே சிந்தித்துக் கொண்டிருந்த இந்த மாபெரும் புரட்சியாளனை என் எழுத்துக்குள் அடக்கி விட முடியாது.&lt;br /&gt;
அவரின் மிகச் சில பக்கங்களை மட்டுமே முன் வைத்திருக்கிறேன். காரலால் கவரப்பட்ட பல நல்ல இதயங்கள் எடுத்துரைத்ததை, என் எழுத்துக்கள் மூலம் உங்களுக்கு கடத்த முயன்றிருக்கிறேன்.&lt;br /&gt;
குறிப்பாக சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ரா. அவர்களின் பேச்சு என்னை மிகவும் பாதித்தது.&lt;br /&gt;
காரலைப் பற்றி நிறைய கற்க தூண்டியது.&lt;br /&gt;
படிக்கிறேன்...&lt;br /&gt;
இன்னமும் படிக்கிறேன். &lt;br /&gt;
அதற்கு எழுத்தாளர் எஸ்.ரா. அவர்களுக்கு என் தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...🙏.&lt;br /&gt;
&lt;br /&gt;
காதலும் நட்பும் வளர்த்த ஒரு சிந்தனையாளன் சிந்திப்பதை நிறுத்திக் கொண்ட போதும், காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான்.&lt;br /&gt;
அவனின் சிந்தனை துளிகள் சில உங்கள் சிந்தனைக்கு...&lt;br /&gt;
&lt;br /&gt;
கற்றவர்களிடம் கற்பதை விட,கற்றுக் கொண்டு இருப்பவர்களிடம் கற்றுக் கொள்...!&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;என்றும் நினைவில் கொள்.&lt;br /&gt;
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
நிலைமையை மட்டும் மாற்றினால் போதாது, நீங்களும் மாற வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எதிரி ஆயுதம் ஏந்தாதவரை விமர்சனம் என்பதே ஆயுதம்.&lt;br /&gt;
அவன் ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதம் என்பதே விமர்சனம்...!&lt;br /&gt;
&lt;br /&gt;
நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது...!&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காக உழைக்கும் போது மனிதனாகிறான்.&lt;br /&gt;
ஒரு சமுதாயத்திற்காக மக்களுக்காக வாழும் போது அவன் உண்மையான மனிதன் ஆகிறான்...!&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி சொல்லி விட்டு செல்லவில்லை இந்த மனிதன்.&lt;br /&gt;
அப்படியே வாழ்ந்து விட்டுத் தான்  சென்றிருக்கிறான்...!&lt;br /&gt;
மார்க்ஸ்...&lt;br /&gt;
கார்ல் மார்க்ஸ்...&lt;br /&gt;
கார்ல் என்ரிச் மார்க்ஸ்...&lt;br /&gt;
எனும் கம்யூனிஸ்டுகளின் கடவுள்...!&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழச்சி கலாவதி அய்யனார்.&lt;/div&gt;</summary>
		<author><name>Raj</name></author>
	</entry>
</feed>