
<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="en">
	<id>http://horts.in/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D</id>
	<title>விவேகானந்தர் - Revision history</title>
	<link rel="self" type="application/atom+xml" href="http://horts.in/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="http://horts.in/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-05-07T19:00:29Z</updated>
	<subtitle>Revision history for this page on the wiki</subtitle>
	<generator>MediaWiki 1.37.2</generator>
	<entry>
		<id>http://horts.in/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=2817&amp;oldid=prev</id>
		<title>Raj: Created page with &quot;Category: Kalavathi right  காவி கட்டிய துறவியின் 158 வது பிறந்த தி...&quot;</title>
		<link rel="alternate" type="text/html" href="http://horts.in/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=2817&amp;oldid=prev"/>
		<updated>2021-01-12T04:09:11Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Created page with &amp;quot;&lt;a href=&quot;/index.php/Category:Kalavathi&quot; title=&quot;Category:Kalavathi&quot;&gt;Category: Kalavathi&lt;/a&gt; &lt;a href=&quot;/index.php/File:Swami-vivekananda-tamil.jpg&quot; title=&quot;File:Swami-vivekananda-tamil.jpg&quot;&gt;400px|right&lt;/a&gt;  காவி கட்டிய துறவியின் 158 வது பிறந்த தி...&amp;quot;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;New page&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[Category: Kalavathi]]&lt;br /&gt;
[[File:swami-vivekananda-tamil.jpg|400px|right]]&lt;br /&gt;
&lt;br /&gt;
காவி கட்டிய துறவியின் 158 வது பிறந்த தினம் இன்று.&lt;br /&gt;
1863 சனவரி 12  ல் மேற்கு வங்காளம், கல்கத்தாவில் நரேந்திர நாத் தத்தா வாக அவதரித்தார் இந்த அத்வைத வேதாந்த தத்துவஞானி.&lt;br /&gt;
நாம் பலரும் நன்கு அறிந்த அறிவிற் சிறந்த மகான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
குழந்தை பருவத்தில் தன் அன்னையிடம் இராமாயணமும் மகாபாரதமும் கேட்டு வளர்ந்தவர்.&lt;br /&gt;
உலகின் ஏற்ற தாழ்வுகளை கண்டு மனம் வருந்தி அதை கேட்டு விட இறைவனை தேடியவர்.&lt;br /&gt;
கடவுள் இருக்கிறாரா...?&lt;br /&gt;
எங்கே இருக்கிறார்...?&lt;br /&gt;
நாம் அவரைக் காண முடியுமா என பலரிடமும்  கேட்டு கொண்டே வளர்ந்தவர்.&lt;br /&gt;
அப்படி அவர் கேட்டவருள் ஒருவர் தேசிய கவி தாகூரின் தந்தை ஆவார்.&lt;br /&gt;
அவர் சிறிது யோசித்து பின் நீ ஒரு மகானாக வளர்வாய் என வாழ்த்தினாராம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
குதிரை வண்டியில் பள்ளிக்கு  சென்றதால், குதிரை வண்டியை பிடித்துப் போய், &lt;br /&gt;
ஒருமுறை நீ என்னவாக ஆசைப் படுகிறாய் என கேட்ட ஆசிரியரிடம்  நான் குதிரை வண்டிக்காரன் ஆகப் போகிறேன் என்று சொன்னாராம்.&lt;br /&gt;
அனைவரும் கேலி செய்த போதும், அவர் தாய் புவனேஸ்வரி தேவி மட்டும் அவரை அழைத்து நீ குதிரை வண்டிக்காரன் ஆவதில் தவறில்லை.&lt;br /&gt;
ஆனால் அர்ஜூனனுக்கு தேர் ஓட்டினானே  கிருஷ்ணன்... அந்த கிருஷ்ணனைப் போல் மிகச்சிறந்த  சாரதியாக வேண்டும் என்று கூறினாராம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த சிறுவன் தான் பிற்காலத்தில் இந்தியாவின் தலை சிறந்த சமயத் தலைவர்களில் ஒருவராகவும், மக்களை சரியான  ஆன்மீகப் பாதையில் நடத்திச்சென்ற சாரதியுமான  விவேகானந்தர்&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த சமய சொற்பொழிவாளரின் பிறந்த தினம் இன்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
இசையும் தியானமும் அவர் கூடவே வளர்ந்தது.&lt;br /&gt;
கிண்கிணி நாதம் போன்ற குரல் வளம் கொண்டவராம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பள்ளிப்படிப்பை முடித்து, கல்லுரி படிப்பையும் முடித்தார்.&lt;br /&gt;
தத்துவம் பயின்றார்.&lt;br /&gt;
இருப்பினும் &lt;br /&gt;
எப்பொழுதும் இறை உண்மையினை அறியும் முயற்சியிலேயே இருந்தார்.&lt;br /&gt;
இதற்காகவே பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார்.&lt;br /&gt;
அங்கும் மனம் ஒருநிலை  அடைய மறுத்தது.&lt;br /&gt;
தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை ப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்தார்.&lt;br /&gt;
சந்தித்த ஆண்டு 1881.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் உருவ வழிபாட்டில் திருப்தி அடையாத விவேகானந்தர் பின்னர் இரண்டு மூன்று சந்திப்பிற்கு பிறகு அவரின் வழிபாடுகளை புரிந்து கொண்டு அவரின் முதன்மை சீடராகிப் போகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1886 ல் இராமகிருஷ்ணர் மறைந்த பின் விவேகானந்தர் துறவறம் பூண்டார்.&lt;br /&gt;
இராமகிருஷ்ண இயக்கம் தொடங்குகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் அவரின் சுற்றுப் பயணம் தொடங்கியது.&lt;br /&gt;
1892 ல் கன்னியாகுமரியில் கடலில் அமைந்த பாறை மீது மூன்று நாட்களாக தியானம்.&lt;br /&gt;
நீந்தியே பாறையை அடைந்ததாக சொல்லப் படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதன் பிறகு சென்னை வந்தவரிடம் சிகாகோ வில் நடைபெற உள்ள  உலக சமய மாநாட்டில் இந்து சமயம் சார்பாக கலந்து கொள்ள வேண்டுதல் வைக்கப் படுகிறது.&lt;br /&gt;
1893 ல் சிகாகோ பயணம்...&lt;br /&gt;
அங்கு அவருடைய  பேச்சின் ஆரம்பமே  சரித்திரம்‌ படைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
My dear brothers and sisters.... கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது.&lt;br /&gt;
இன்று வரை அந்த அலைகள் அதிர்ந்து கொண்டு தான் இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அமெரிக்க பயணத்தை முடித்து, இலங்கை வழியாக 1897 ல் பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்றைய இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி  மிகச் சிறப்பான வரவேற்பை வழங்கினார்.&lt;br /&gt;
உலக அரங்கில் இந்து மதத்தை தன் சொற்பொழிவால் நிலை நிறுத்திய விவேகானந்தரின் பாதங்கள் மண்ணில் படக் கூடாது என்று எண்ணிய மன்னர் தன் தலை குனிந்து அதில் வைக்க கேட்டுக் கொண்டாராம்.&lt;br /&gt;
மறுத்த விவேகானந்தர் பின்னர் தங்கத்தட்டில் கால் வைத்து இறங்கியதாக சொல்லப்படுகிறது.&lt;br /&gt;
இறங்கியவரை தேரில் அமர வைத்து மன்னரும் இழுத்ததாகவும்  சொல்லப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் மீண்டும் இரண்டாண்டுகளில் இரண்டாவது முறையாக மேல் நாட்டு பயணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவரின் சொற்பொழிவால் ஈர்க்கப்பட்ட ஒரு அழகிய அமெரிக்க இளம் பெண் அவர் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து கொண்டே இருந்து இருக்கிறார்.&lt;br /&gt;
ஒருமுறை அவரிடமே சென்று நீங்கள் மிகுந்த அறிவு மிக்கவராக இருக்கிறீர்கள்.&lt;br /&gt;
நானோ அழகுள்ளவள்.&lt;br /&gt;
இருவரும் திருமணம் செய்து கொண்டால் நமக்கு பிறக்கும் குழந்தை அறிவும் அழகும் இணைந்து பிறக்குமல்லவா...!&lt;br /&gt;
நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டாராம்.&lt;br /&gt;
அதற்கு விவேகானந்தர்...&lt;br /&gt;
தாயே தங்களுக்கோ வயது இருபது.&lt;br /&gt;
எனக்கு வயது முப்பது.&lt;br /&gt;
நாம் திருமணம் செய்தாலும் குழந்தை அறிவும் அழகும் உள்ளதாக பிறக்கும் என்பதற்கு எந்த உத்ரவாதமும் இல்லை.&lt;br /&gt;
அதற்கு பதில் நீங்கள் என்னையே உங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றாராம்.&lt;br /&gt;
பெண்கள் அனைவரையும் தாயாகவே பார்த்த துறவி.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவரது சீடர்களில் ஒருவரான சகோதரி நிவேதிதை தான் நம் பாரதி க்கு குருவாக இருந்தவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருமுறை ஜெய்ப்பூர் மன்னர் அரண்மனையில் விவேகானந்தர் தங்கி இருந்த போது அங்கு நடன நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.&lt;br /&gt;
துறவி என்பதால் அவர் அதில் கலந்து கொள்ள மனமில்லாது தன் அறையிலேயே ஓய்வில் இருந்திருக்கிறார்.&lt;br /&gt;
அப்போது அங்கு ஒரு பெண் பாடிய பாடல் அவர் செவிகளை தொட்டது. அதில் இளைந்தோடிய சோகம் அவரை அந்த இடத்திற்கு அழைத்து வந்து விட்டது.&lt;br /&gt;
அப்போது அவர் கூறியது...&lt;br /&gt;
எந்த தொழில் செய்தாலும் அவளின் பாடல் எனக்கு புதிய பாடத்தை  கற்றுத் தந்தது.&lt;br /&gt;
அவள் பாடலில் இருந்த அவளின் வாழ்க்கை சிரமங்கள் என்னை உருக்கி விட்டது.&lt;br /&gt;
நடனப் பெண்ணாகவே இருந்தாலும் அவளும் அம்பாளின் அம்சமே ...!&lt;br /&gt;
என்று சொல்லி சென்றாராம்...பெண்களை தெய்வமாக பார்த்த அந்த தெய்வத் துறவி.&lt;br /&gt;
&lt;br /&gt;
மனிதர்கள் தெய்வீகமான வர்கள் என்று நம்பினார் விவேகானந்தர்.&lt;br /&gt;
இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் வலியுறுத்தினர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அமெரிக்காவில் தங்கி இருந்த விவேகானந்தர், நீரோடை வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு சில இளைஞர்கள் முட்டை ஓடுகளை நீரில் மிதக்க விட்டு, அசையும் அவைகளை துப்பாக்கியால் சுட முயற்சி செய்தனராம்.&lt;br /&gt;
ஒன்றையும் சுட முடியாமல் தவித்த இளைஞர்களிடம் சென்று சுவாமி அவர்கள் அனைத்தையும் குறி வைத்து சுட்டுக் காண்பித்தாராம்.&lt;br /&gt;
அசந்து போன அவர்கள், தாங்கள் பயிற்சி பெற்ற வீரனாக இருப்பீர்கள் என்று சொன்னார்கள்.&lt;br /&gt;
ஆனால் தான் முதன் முறையாக இன்று தான் துப்பாக்கியை கையில் எடுப்பதாக கூறினாராம்.&lt;br /&gt;
பிறகெப்படி என வியந்து நின்ற இளைஞர்களிடம் எந்த செயலும் சாத்தியமே ... நம் மனம் ஒருமுகப்படும் போது எனச் சொல்லி, தியானத்தின் சிறப்பை எடுத்துரைத்தார் நம் சுவாமி.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள்.&lt;br /&gt;
இந்தியாவை உயர்த்தி காட்டுகிறேன் என கூறியவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் மூன்று விரதங்களையும்,  இரண்டு கடமைகளையும் கை கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.&lt;br /&gt;
மூன்று விரதங்கள் :&lt;br /&gt;
1. பசித்தவற்கு சோறு.&lt;br /&gt;
2. நோயுற்றவனுக்கு மருந்து.&lt;br /&gt;
3. அறிவற்றவனுக்கு கல்வி.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டு  கடமைகள் :&lt;br /&gt;
1. தொண்டு.&lt;br /&gt;
2. துறவு.&lt;br /&gt;
&lt;br /&gt;
துறவு என்றால் காவியணிவது அல்ல.&lt;br /&gt;
சுயநலத்தை துறப்பது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மகான்கள் எல்லாம் குறுகிய ஆயுள் வாங்கி வந்தது போல் இவரும் தன் முப்பத்தொன்பதாவது வயதிலேயே  1902 ல்  பேலூரில் முக்தி நிலை அடைந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருநாள் தற்செயலாக தன் இரு கைகளையும் கட்டிக் கொண்டு கம்பீரமாக அரங்கின் முன் நின்ற விவேகானந்தரை, ஒரு புகைப்பட கலைஞர் கிளிக் செய்து விட்டார்.&lt;br /&gt;
அதை சிகாகோவின் கோஸ்லித்தோ கிராஃபிக் கம்பெனி போஸ்டராக அச்சடித்து நகர் முழுக்க தொங்க விட்டதாம்.&lt;br /&gt;
அந்த படம் தான் நாம் இன்றும் கண்டு ரசிக்கும்... வியக்கும் நம் விவேகானந்தர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவரின் பிறந்த தினம் தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தத்துவஞானி யின் பிறந்த தினத்தில் அவரின் சிந்தனைகள் சிலவற்றை நாமும் சிந்திப்போம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1.உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
2.நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.&lt;br /&gt;
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.&lt;br /&gt;
&lt;br /&gt;
3.நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு.&lt;br /&gt;
&lt;br /&gt;
4.ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி,&lt;br /&gt;
அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
5.அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும்&lt;br /&gt;
நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும்.&lt;br /&gt;
அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும்.&lt;br /&gt;
உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
6.கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது.&lt;br /&gt;
ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல்.இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்&lt;br /&gt;
&lt;br /&gt;
7.இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள்.&lt;br /&gt;
இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
8.ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரை, கல்வியறிவு அற்றவர்களை,&lt;br /&gt;
செருப்பு தைக்கும் தொழிலாளியை, தெரு பெருக்குபவரை,&lt;br /&gt;
மறந்து விடாதீர்கள்.&lt;br /&gt;
அவர்களும் ரத்தமும் சதையாலும் ஆன நம்முடைய சகோதரர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
9.வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமை கொள்ளுங்கள்.&lt;br /&gt;
பெருமையோடு, ‘நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்!’ என்று ஆராவரியுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
10. சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
என் குழந்தைகளே நீங்கள் என்னை விட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்....&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி எத்தனை எத்தனையோ அவரின்  சிந்தனை துளிகள், கடலாக நம்முன் பரந்து விரிந்து கிடக்கிறது.&lt;br /&gt;
அதில் நீந்தினால் முத்தெடுப்பது உறுதி.&lt;br /&gt;
 &lt;br /&gt;
இளைஞர்களின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை வளர்க்கும் வைர வரிகள் ஏராளம்... ஏராளம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
கடவுளைத் தேடி என்ற தலைப்பில் அவர் எழுதிய வங்க மொழிக் கவிதை இதோ...&lt;br /&gt;
&lt;br /&gt;
அனைத்தும் ஆகி அன்பாகி, அமைபவன் அவனே அவன்தாளில், உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்  உடனே தருக என் நண்பா...&lt;br /&gt;
&lt;br /&gt;
இவைகள் யாவும் உன் முன்னே, இருக்கும் அவனின் வடிவங்கள்... இவைகளை விடுத்து வேறெங்கே இறைவனை தேடுகிறாய் நீ&lt;br /&gt;
&lt;br /&gt;
மனதில் வேற்றுமை இல்லாமல்...மண்ணுல கதனில் இருக்கின்ற அனைத்தையும் நேசித்திடும் ஒருவன் ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
சுவாமி விவேகானந்தர்&lt;br /&gt;
&lt;br /&gt;
வாருங்கள்...உலகமே நமது வீடு...&lt;br /&gt;
அங்குள்ள உயிர்கள் அனைத்தும் நம் உறவுகள்...&lt;br /&gt;
அனைத்தையும் நேசிப்போம்....&lt;br /&gt;
ஆண்டவனாக மாற முடியா விட்டாலும் மனிதனாக வாழ முயற்சிப்போம்...🙏.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்றும் அன்புடன்.... உங்கள் கலாவதி அய்யனார் ...🙏.‌‌&lt;/div&gt;</summary>
		<author><name>Raj</name></author>
	</entry>
</feed>