
<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="en">
	<id>http://horts.in/index.php?action=history&amp;feed=atom&amp;title=Amma</id>
	<title>Amma - Revision history</title>
	<link rel="self" type="application/atom+xml" href="http://horts.in/index.php?action=history&amp;feed=atom&amp;title=Amma"/>
	<link rel="alternate" type="text/html" href="http://horts.in/index.php?title=Amma&amp;action=history"/>
	<updated>2026-06-22T23:10:20Z</updated>
	<subtitle>Revision history for this page on the wiki</subtitle>
	<generator>MediaWiki 1.37.2</generator>
	<entry>
		<id>http://horts.in/index.php?title=Amma&amp;diff=2619&amp;oldid=prev</id>
		<title>Raj: Created page with &quot;Category: Kalavathi    எனக்கே தெரியாது நண்பா...😜😍.  பள்ளி காலத்தில் அங்கொன்றும...&quot;</title>
		<link rel="alternate" type="text/html" href="http://horts.in/index.php?title=Amma&amp;diff=2619&amp;oldid=prev"/>
		<updated>2020-04-12T04:01:41Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Created page with &amp;quot;&lt;a href=&quot;/index.php/Category:Kalavathi&quot; title=&quot;Category:Kalavathi&quot;&gt;Category: Kalavathi&lt;/a&gt;    எனக்கே தெரியாது நண்பா...😜😍.  பள்ளி காலத்தில் அங்கொன்றும...&amp;quot;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;New page&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[Category: Kalavathi]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கே தெரியாது நண்பா...😜😍.&lt;br /&gt;
&lt;br /&gt;
பள்ளி காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கல்லூரியில் கூட ஒரு சில எழுதியிருக்கிறேன் கவிதை என்ற பெயரில்😍.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதன் பிறகு இரண்டாயிரத்து பதிமூன்றில் எனைப் பெற்றவளை நான் எதிர்பாராமல் பறிகொடுத்த போது பித்து பிடித்தவளானேன். ஏற்கனவே குறிப்பிட்டிருப்பேன் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;
பல நாட்களாக  உண்ணாமல் உறங்காமல் கணவரையும் , தவம் இருந்து, நான் பெற்றதையும் கூட மறந்து மதி குழம்பி, அலைந்தேன்.&lt;br /&gt;
உடல் எடை சர சரவென இறங்கியது.&lt;br /&gt;
மருத்துவரிடம் கூட அழைத்துச் செல்லப்பட்டேன்.&lt;br /&gt;
சில மருந்துகள் உட்கொண்டேன் பலனில்லை.&lt;br /&gt;
இரவு முழுவதும் இமை மூடாது , விழிகள் விரிந்தே இருக்கும்.&lt;br /&gt;
பேச்சு கூட குறைந்து போனது.&lt;br /&gt;
எப்படி இந்த ஈடில்லா இழப்பை கடக்க போகிறேன் என தெரியாமலேயே நகர்ந்த நொடிகளில், ஏதோ ஒரு வேகத்தில் விரல்கள் எழுதுகோலை கவ்வியது.&lt;br /&gt;
மை ஊற்ற மறந்து எனது குருதியை நிரப்பி வார்த்தைகளாக கொட்டினேன்.&lt;br /&gt;
அப்பொழுது இரண்டு வழிகளில் எனது வேதனை இறங்கிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;
ஒன்று எழுதுகோல் வழி.&lt;br /&gt;
மற்றொன்று என் விழி வழி சுடும் நீராக...&lt;br /&gt;
எப்படி ஆரம்பித்தேன்...&lt;br /&gt;
எப்போது எப்படி முடித்தேன் என்பது நான் அறியாதது இன்று வரை.&lt;br /&gt;
பல பக்கங்கள் கடந்து சென்றன என் துக்கங்கள்.&lt;br /&gt;
எனக்கான ‌..என் தாய்க்கான உணர்ச்சிகள் அனைத்தையும் அவள் மடி சாய்ந்து நான் பகிர்ந்தது  போன்ற ஒரு உன்னத உணர்வு.&lt;br /&gt;
தொண்டையை அடைத்த துக்கம் , தாயின் அரவணைப்பில் கீழிறங்கி ஜீரணமானது போன்ற ஒரு இலேசான உணர்வு.&lt;br /&gt;
வார்த்தைகளால் அதை வடித்து விட முடியாது.&lt;br /&gt;
அன்று நின்றது என் அழுகை.&lt;br /&gt;
ஆனால் அதைப் படித்த ஒவ்வொரு இதயமும் மீண்டும் அழத் தொடங்கின,&lt;br /&gt;
கிட்டத்தட்ட ஐந்தாறு மாதங்கள் கழித்து.&lt;br /&gt;
கண்களில் கண்ணீரோடு எனை நோக்கினர்.&lt;br /&gt;
என் விழிகள் உலர்ந்து இருந்தன.&lt;br /&gt;
அதன் பிறகு என் தாயை மனதிற்குள் பத்திரப்படுத்தி விட்டேன்.&lt;br /&gt;
அதன் பிறகு அவளுக்காக கண்ணீர் சிந்த வில்லை.&lt;br /&gt;
நான் அன்றிலிருந்து தான் தெளிவாக நின்றேன்.&lt;br /&gt;
அன்று தான் பசியும் உணர்ந்தேன்.&lt;br /&gt;
நித்திரை நினைந்தேன்.&lt;br /&gt;
எனக்கான வைத்தியம் என் விரலில் தான் இருக்கிறது என்று அன்று புரிந்து கொண்டேன்.&lt;br /&gt;
அதைப் படித்து சில இதயங்கள் , நன்றி சகோதரி நான் இது வரை என் தாயை பார்த்த பார்வை வேறு ... இனிமேல் பார்க்கும் பார்வை வேறு என்று சொல்லிச் சென்றன.&lt;br /&gt;
அது தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் எழுதிய நீண்ட உரை.&lt;br /&gt;
பிறகு மீண்டும் இடைவெளி தான்.&lt;br /&gt;
ஆனால் இந்த சில நாட்களாக... குறிப்பாக மலேசியா வந்த பிறகு காலமும் சூழ்நிலையும் எனக்கு ஏதுவாகியது.&lt;br /&gt;
எழுத தூண்டியது.&lt;br /&gt;
எனவே இங்கு தான்... இந்த மலேசிய மண்ணில் தான், நான் தமிழை தொடர்ந்து வளர்க்க அதாவது எழுத.... படிக்க கற்றுக் கொண்டேன்.&lt;br /&gt;
கற்றுக் கொண்டும் இருக்கிறேன்.  &lt;br /&gt;
எழுத்துலகில் நான் கத்துக்குட்டி...😜.&lt;br /&gt;
அன்று எனக்காக ... எழுதிய நான்,இன்று எல்லோருக்காகவும் எழுத தொடங்கி இருக்கிறேன்.&lt;br /&gt;
இனி என் மூச்சு உள்ளவரை தொடர முயல்வேன்...🙏🙏🙏.&lt;/div&gt;</summary>
		<author><name>Raj</name></author>
	</entry>
</feed>