Raj perceptions
Jump to navigation
Jump to search
கோவை வேளாண் பல்கலையில் இளமறிவியல் தோட்டக்கலை என்னுடன் படித்த நண்பன் ராஜ் இன்று பெங்களூரு ஐ.டி.சி நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் உயர் அதிகாரியாக இருக்கிறான். படிக்கும் காலத்திலேயே தனித்துவமான, வித்தியாசமான, ப்ராக்டிகலான கோட்பாடுகள் கொண்டவன். காதல் திருமணம் செய்துகொண்டான். சௌமி, கவின் என்று அழகான இரு குழந்தைகள். இருவரையும் ஆரம்பத்திலிருந்தே போட்டிக் கல்வி முறையில் சேர்க்கவில்லை அவன். "ஓபன் சிலபஸ்"-ல்தான் படித்தார்கள். பன்முகத் திறன் கொண்டவர்களாய் வளர்ந்தார்கள். சௌமி +2 முடித்து இன்று வி.ஐ.டி கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். அசாத்திய துணிச்சலும், தெளிவும் கொண்ட ராஜுவின் மேல் எனக்கு எப்போதும் ஆச்சர்யம் உண்டு.